districts

திருச்சி முக்கிய செய்திகள்

கண்காணிப்புக் குழு கூட்டம்

பாபநாசம், ஆக.4 - தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட கண்கா ணிப்பு குழு கூட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் பாப நாசம் பிடிஓ வட்டார ஊராட்சி  வெங்கடேசன், பிடிஓ  கிராம ஊராட்சி சுதா, வட்டார கல்வி அலுவலர்கள் வேல்முருகன், ஏஞ்சல் பிருந்தா, பள்ளி தலைமை ஆசிரி யர்கள் ரமேஷ், பிரபாகரன், வட்டார ஒருங்கிணைப் பாளர்கள், கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், குழந்தைகளுக்கு தினமும் காலை உணவை உரிய நேரத்தில் வழங்குவதை பள்ளி  ஆசிரியர்கள் மற்றும் மகளிர் திட்ட ஒருங்கிணைப் பாளர்கள் மூலம் கண்காணித்து உறுதி செய்வது என தீர்மானிக்கப்பட்டது.

ரேசன் கடை திறப்பு விழா

பாபநாசம், ஆக.4 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம்  அருகே கூனஞ்சேரி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. மயிலாடுதுறை முன்னாள் எம்.பி.ராமலிங்கம் புதிய ரேசன் கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கி னார். இதில் மாவட்ட துணைச் செயலர் அய்யாராசு, மாவட்டக் கவுன்சிலர் தாமரைச் செல்வன், பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, ஒன்றியக் கவுன்சிலர் ஹாஜா மைதீன், ஊராட்சி மன்றத் தலைவர் பால சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாலை அமைக்கும்  பணி: எம்எல்ஏ ஆய்வு

பாபநாசம், ஆக.4 - சிஜிஎப் திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை நடுப்பட்டியில் நடந்து வரும் பேவர் பிளாக்  சாலை அமைக்கும் பணியை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவா ஹிருல்லா பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அம்மாப் பேட்டையை அடுத்த புத்தூர் கலைமகள் நகரில் 15  ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் நடந்து வரும் வடிகால் அமைக்கும் பணியை பார்வையிட்டார். ஆய்வின் போது அம்மாபேட்டை பேரூராட்சித் தலை வர் ஷோபா, துணைத் தலைவர் ரமேஷ், அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன், பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

மருத்துவ முகாம்

பாபநாசம், ஆக.4 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அட்சயம் லயன்ஸ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாமை நடத்தின. பாபநாசம் வித்யா  பாட சாலையில் நடந்த முகாமில் டாக்டர் குருநாதன் உள்ளிட்ட மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்டோரை பரி சோதித்தனர். இதில் இசிஜி, எக்கோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அட்சயம் லயன்ஸ் கிளப் தலைவர் சரவணன், செயலர் மணி  உட்பட பலர் பங்கேற்றனர்.

உலக தாய்ப்பால் வார விழா: சத்துப் பொருட்கள் வழங்கல்

தஞ்சாவூர், ஆக.4-  உலக தாய்ப்பால் வார விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.  அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கம் சார்பில், பேராவூரணி அரசு தலைமை  மருத்துவமனையில் தாய்மார்களுக்கு பழங்கள், பேரீச்சம்பழம் மற்றும் ரொட்டி ஆகியவை வழங்கி சிறப்பிக் கப்பட்டது. நிகழ்வில், பேராவூரணி அரசு மருத்துவ மனை மருத்துவர்கள், பேராவூரணி ஸ்டார் லயன்ஸ் சங்கத்  தலைவர் செ.பன்னீர்செல்வம், செயலாளர் ஆர்.ஆதித் யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பாபநாசம் பாபநாசம் அரசு மருத்துவமனை, பாபநாசம் ரோட்டரி  கிளப் இணைந்து தாய்ப் பால் வார விழாவை நடத்தின. பாபநாசம் அரசு மருத்துவமனையில் நடந்த  விழாவில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்திவேல்  வரவேற்றார். அரசு மருத்துவமனை மருத்துவர் தனம்,  செவிலியர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மருத்துவக் காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யக் கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.4-  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, தஞ்சாவூர் வட்டக் கிளையின் 9 ஆவது மாவட்டப் பேரவை தஞ்சாவூரில் கிளையின் தலைவர் எம்.முனி யாண்டி தலைமையில் நடைபெற்றது. கும்பகோணம் கோட்டச் செயலாளர் சி.கணேசன் வர வேற்றார். கும்பகோணம் வடக்கு கோட்டச் செயலாளர் பி.ராதா அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். திருச்சி  மண்டலச் செயலாளர் ஜி.பஷீர் பேரவையை துவக்கி  வைத்துப் பேசினார். வேலை அறிக்கையை கிளைச் செய லாளர் டி.கோவிந்தராஜு, வரவு-செலவு அறிக்கையை கிளைப் பொருளாளர் வி.காமராஜு சமர்ப்பித்தனர்.  சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பின் தஞ்சாவூர் மண்டலச்  செயலாளர் எஸ்.ராஜாராமன், கிளைத் தலைவர் ஏ.அதி தூத மைக்கேல் ராஜ், செயலாளர் பி.காணிக்கைராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். நல அமைப்பின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வி.பிச்சைராஜன் சிறப்பு ரையாற்றினார். புதிய மாவட்டத் தலைவராக டி.மணிவண்ணன், செய லாளராக டி.கோவிந்தராஜு, பொருளாளராக எம்.முனி யாண்டி, மாவட்டத் துணைத் தலைவர்களாக ஆர்.மேக நாதன், பி.செல்வராஜ், ஆர்.ராஜ்குமார், துணைச் செய லாளர்களாக வே.காமராஜ், ஏ.தியாகராஜன், சி.கணே சன், பி.ராதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மின்வாரிய பிரிப்பை கைவிட வேண்டும். ஊழியர்,  ஓய்வூதியர்களுக்கு எதிராக 12.2.24 அன்று ஏற்படுத்தப் பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண் டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவு செய்த தொகையை திரும்பப் பெறுவதிலுள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசே தேசிய பேரிடராக உள்ளது தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பேட்டி

தூத்துக்குடி,  ஆக. 4 எந்த பாதிப்பையும் மத்திய அரசு தேசிய  பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. அவர்களே தேசிய பேரிடராக தான் இருக் கின்றனர் என்று கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.  தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டி யில் அவர் கூறியதாவது: மத்திய அரசு  செவி சாய்க்க வேண்டும் என்று தான்  ஆர்ப்பாட்டம் நடத்தினோம், நாடாளுமன்றத் தில் பேசினோம். மாற்றம் வரும் என்று  எதிர்பார்க்கிறோம். தமிழ்நாட்டில் வெள்ளம்  வந்த போது ஏழு நாட்களுக்கு முன்பே  நாங்கள் தெரிவித்தோம் என்று சொன்னார் கள். ஆனால், உண்மை அது இல்லை என்று நமது முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.  இதே நிலைதான் இன்று கேரளாவில் ஏழு  நாட்கள் முன்பு நாங்கள் தகவல் தெரிவித்து  இருந்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை என்று அவையிலேயே தெரிவித்த னர். அடுத்த நாளே கேரள முதல்வர் பினராய் விஜயன் உண்மைக்கு புறமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். தொ டர்ந்து பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்வது கிடையாது. தகவல் தந்து  விட்டோம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்  கொண்டிருக்கிறார்கள்.  இதை தான் வழக்கமாக செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு மாநிலங்களுக்கு தேவையான நிதி தந்தாக  வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களுக் காக எவ்வளவு நாள் இழுத்தடிக்க முடி யுமோ அவ்வளவு நாள் இழுத்துக் கொண்டு  இருக்கிறார்கள். நியாயமாக மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதி கொடுத்து தான்  ஆக வேண்டும். மத்திய அரசு எந்த பாதிப்பை யும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. அவர்களே தேசிய பேரிடராக தான்  இருக்கின்றனர் என்றார்.

காவல்துறை சார்பில் ரோந்து

தென்காசி, ஆக.  4 தென்காசி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர். தென்காசி மாவட்டம் காவல் கண்காணிப்பா ளர்   டிபி .சுரேஷ்குமார்    உத்தரவின்பேரில் மாவட்டத்திற்குட் பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வா ளர்கள் தலைமையிலான காவல் துறையினர் அந்தந்த  காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதிகளிலும் மக்கள் அதி கம் கூடும்  பகுதிகளிலும் குற்ற செயல்கள் நடைபெறா  வண்ணம் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வரு கின்றனர்.