திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- அரசு விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உண வின் தரத்தை மேம்படுத்த வேண்டு மென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்கம் அரசு விடுதி பாதுகாப்பு மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருண் ஓட்டலில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டக் குழு உறுப்பினர் ரஞ்சித் தலைமை வகித்தார். மாநாட்டில் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், மாநில துணைத் தலைவர் சரவணன், மாவட்டத் தலை வர் சூர்யா, மாவட்ட துணைச் செயலா ளர் ஹரிபிரசாத் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். அரசு விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு கூடுதலாக கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும். விடுதிகளில் போதைப் பொருள் தடுப்பை உறுதி செய்ய வேண்டும். விடுதி களுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டி யலை விரைவாக செயல்படுத்த வேண் டும். விடுதிக்குள் மதரீதியான, வகுப்பு வாத அமைப்புகள் நுழைவை தடுப் பதை உறுதி செய்ய வேண்டும். சமூக ஒற்றுமை பற்றி மாணவர்களுக்கு அறி வுரை வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, நீர், உறைவிடம் போன்ற வற்றின் தரத்தினை மேம்படுத்த வேண்டும். விடுதியில் சுகாதாரத்தை பேண வேண்டும். விடுதியில் வேலை செய்யும் ஊழியர்களின் வரவை உறுதிப் படுத்த வேண்டும். விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் மருத்துவச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும். மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற் றது. இதில் கன்வீனராக ரஞ்சித், காட்டூர் விடுதி துணை கன்வீனராக அன்பு, சுதேசனா, ஒருங்கிணைப்பு குழுவின ராக 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.