மயிலாடுதுறை, ஜன.2 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் கொத்தங்குடி ஊராட்சி பனங் குடி கிராமத்தில் சேதம டைந்து காணப்படும் மேல் நிலை குடிநீர் தேக்கத் தொட்டியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொத்தங்குடி ஊராட்சி பனங்குடி காலனித் தெரு, கீழத்தெரு, நெல்லடித் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 250 குடும்பங்களுக்கு மெயின் ரோட்டில் அமைந் துள்ள மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியிலிருந்து ஊராட்சி மூலம் குடிநீர் விநி யோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் டேங்க் கட்டி பல ஆண்டுகளான நிலை யில், டேங்கின் பில்லர், கான் கீரிட் பெல்ட் ஆகியவைகள் விரிசல் அடைந்து ஆங் காங்கே பெயர்ந்து விழு கின்றன. இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் பல முறை முறையிட்டும் பல னில்லை. டேங்கின் உறுதித் தன்மை குறித்து அதிகாரி கள் உடனே ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும். அது வரை குடிநீர் விநியோகிக்க மாற்று வழியை ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் எஸ்.ரகு பதி கூறியுள்ளார்.