பெரம்பலூர், ஜன.5- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு செல்லக்கூடிய சாலை மிக மோசமாக உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் வாய்க்கால் கள் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் தேங்கி அங்கு சுகாதாரமற்ற சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும். மழைநீரை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று குன்னம் கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.