கரூர், செப்.3 - கிராமிய கோட்டத்தில் பணியாற்றும் பகுதி நேரம், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப் பின் கரூர் கிராமிய கோட்ட மாநாடு அரவக் குறிச்சியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கிராமிய கோட்டத் தலைவர் டி.துரை தலைமை வகித்தார். கோட்டச் செய லாளர் பி.ஈஸ்வரன் வேலை அறிக்கையை முன்வைத்து பேசினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் க.தன பால், சிஐடியு மாவட்ட துணை செயலா ளர்கள் சிஆர்.ராஜாமுகமது, கே.வி.கணே சன், விதொச மாவட்ட துணை செயலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். கரூர் கிராமிய கோட்டத்தின் புதிய தலைவ ராக டி.துரை, கௌரவ தலைவராக மகா லிங்கம் கோட்டச் செயலாளராக ஈஸ்வரன், துணைச் செயலாளர்களாக செல்லமுத்து, பெருமாள் துணைத் தலைவர்களாக ஜான் போஸ், நாகராஜ் உள்ளிட்ட 5 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
கரூர் கிராமிய கோட்டத்தில் பணியாற்றும் ஆர்டபிள்யூஇ களப் பணியாளர்களுக்கு முதன்மை வரிசை பட்டியல் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். கரூர் கிரா மிய கோட்ட அனைத்து பிரிவு அலுவல கங்கள் மற்றும் துணை மின் நிலையங்களி லும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி கழிப்பிட வசதி மற்றும் பாதுகாக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் கிராமிய கோட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள டிஏ பில், டபுள் வேஜஸ் மற்றும் ஜிபிஎப் லோன் ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். ஊதிய உயர்வை நிறை வேற்றி உடனே வழங்க வேண்டும். நிலை ஆணை எண்.2ஐ ரத்து செய்ய வேண்டும். பகுதி நேரம், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன் ஊழி யர்களை ஊர் மாற்றம் செய்வதுடன், உதவி யாளர் பதவி உயர்வு மற்றும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.