districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஒப்பந்தத் தொழிலாளர்களை  பணி நிரந்தரம்  செய்யக் கோரிக்கை

புதுக்கோட்டை, அக்.21 - மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு, மின் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். சித்தையன் தலைமை  வகித்தார். செயலாளர் கே.நடராஜன், ஆலங்குடி கோட்டச் செயலர் விஜயகுமார், அறந்தாங்கி கோட்டச் செயலர்  வி.தர்மராஜன், பொருளாளர் ஆர். ஆறுமுகம் உள்ளிட்டோர்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

.தோல் நோய் மருத்துவ முகாம்

அறந்தாங்கி, அக்.21 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிளான் தெரு பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இலவச தோல்நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் கராத்தே கண்ணையன் தலைமை வகித்தார். தி ஃபோர்ட் சிட்டி   ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் அப்துல் காபர்கான் வர வேற்றார். முகாமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் துவக்கி வைத்தார்.  லேசர் மருத்துவர் தெட்சிணாமூர்த்தி சிகிச்சை அளித்தார்.  மனிதநேய ஜனநாயக கட்சியின் மனித உரிமை பாது காப்பு அணி மாநிலச் செயலாளர் முனைவர் முபாரக் அலி  வாழ்த்திப் பேசினார்.  தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் இப்ராம்ஷா, பொருளாளர் முருகேசன், வணிகர் சங்க  பேரவை கிரின் முகமது ஆகியோர் கலந்து கொண்ட னர். இதன்மூலம் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். திசைகள் மாணவ வழிகாட்டி அமைப்பின்  பொருளாளர் முகமது முபாரக் நன்றி கூறினார்.

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்

அரியலூர், அக்.21 - அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே யுள்ள கொக்கனேரி, மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜியாபத் (53). இவர் தினமும் மது அருந்திவிட்டு தகராறில்  ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், கடந்தாண்டு இவரது மனைவி ரியாஸ்பி (42) கோபித்துக் கொண்டு பெற்றோர்  வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், கடந்த 27.10.2022 அன்றிரவு மாமனார்  வீட்டுக்குச் சென்ற ஜியாபத், தனது மனைவி ரியாஸ்பியை  தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு  அவர் மறுத்ததையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜியாபத் தனது  மனைவி ரியாஸ்பியை கத்தியால் குத்திக் கொலை  செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளை யம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, ஜியாபத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோ பர், குற்றவாளி ஜியாபத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து ஜியாபத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை

தஞ்சாவூர், அக்.21-  தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை மேலக்காலனி பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஆனந்தராஜ். இவரது மனைவி அஞ்சலிதேவிக்கு (34) சனிக்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது.  இதையடுத்து உறவினர்கள் அவரை ஒரத்தநாடு தாலுகா, தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அஞ்சலிதேவியை மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்த னர். இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அஞ்சலிதேவி தஞ்சை அழைத்து செல்லப்பட்டார்.  இந்நிலையில், தஞ்சை செல்லும் வழியில் அஞ்சலி  தேவிக்கு பிரசவ வலி அதிகமானதால், ஆம்புலன்சில் இருந்த அவசர சிகிச்சை நிபுணர் சிதம்பரகண்ணன் அஞ்சலிதேவிக்கு பிரசவம் பார்த்தார். இதில் அஞ்சலி தேவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தாயும், சேயும் அழைத்து  செல்லப்பட்டனர்.  உரிய நேரத்தில் பிரசவம் பார்த்து தாயையும், குழந்தை யையும் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை உறவினர்கள் பாராட்டினர்.

‘நீட் விலக்கு நம் இலக்கு’  மயிலாடுதுறையில் கையெழுத்து இயக்கம்

மயிலாடுதுறை, அக்.21 - நீட் விலக்கு மசோதாவின் முக்கியத்துவத்தை குடியரசுத்  தலைவருக்கு உணர்த்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்ற வாசகத்துடன் திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் சனிக்கிழமை தமிழகம்  முழுவதும் நடத்தப்பட்டது. 50 நாட்களில் 50 லட்சம் கையெ ழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் வகையில் இந்த இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக, திமுக-வின் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் நீட் விலக்கு கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார். சென்னையில் முதலமைச்சர் தலைமையில் நடந்த  நிகழ்ச்சியை, காணொலி வாயிலாக பொதுமக்கள் பார்க்கும்  வண்ணம் பிரம்மாண்ட எல்இடி திரையில் ஒளிபரப்பு செய்யப் பட்டது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் 500-க்கும் மேற்பட் டோர் கையெழுத்திட்டனர். மாவட்டம் முழுவதும் நீட் விலக்கு  கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினர்.

நவ.4 இல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சிராப்பள்ளி, அக்.21 - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி  மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார்  துறை வேலைவாய்ப்பு முகாம் நவம்பர் 4 அன்று நடை பெற உள்ளது.  திருச்சி சமயபுரம் டோல்பிளாசா அருகில் உள்ள தன லட்சுமி சீனிவாசன் கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இம்முகாம் நடைபெற உள்ளது.   முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை உள்ளிட்ட பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த  150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளன. மேலும்  திறன் பயிற்சி நிறுவனங்கள், இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்புகள் வரை கல்வித் தகுதி யுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை நாடு நர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்போர், சுய விவரக்குறிப்பு, அனைத்து கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் அட்டை  மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்று டன் கலந்து கொள்ள வேண்டும்.  மேலும், தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்புவோர், தமிழ்நாடு  அரசின் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

பொது மருத்துவ முகாம்

பாபநாசம், அக்.21 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப்,  தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர், ஆப்பிள்  ஷாப்பிங் மால், ஆப்தீன் மெட்ரிக்குலேசன் பள்ளி  இணைந்து மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாமை நடத்தின. இதில் மருத்துவர்கள் கார்த்தி கேயன், வினோதினி, பிரதீப், பரிதா ஆகியோர் மாண வர்களை பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். பாப நாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ராஜா முகமது, செய லர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.     

வருமான வரி செலுத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், அக்.21-  தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில், வருமான வரித் துறையின் சார்பாக, வருமான வரிசெலுத்துதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மா.விஜயா முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப.சுப்பிரமணியன், துணைமுதல்வர் முனைவர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சிறப்பு விருந்தினரான வருமான வரித்துறை உதவி ஆணையர் சீனிவாசன் உரையாற்றினார்.  அப்போது மாணவர்களுக்கு வருமானவரி தொடர் பான தகவல்களையும், வருமான வரியின் முக்கியத்து வம், வரி செலுத்துவதின் அவசியம் குறித்தும் எடுத்து ரைத்தார். நிகழ்ச்சியில், வருமான வரித்துறை அலுவலர்  வில்விஜயன் மற்றும் ஆய்வாளர்கள், மாணவ-மாணவி கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக மருதுபாண்டியர் கல்லூரி வணிக மேலாண்மைத் துறைத் தலைவர் வித்யா வரவேற்றார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் செந்தில் குமார் நன்றி கூறினார்.

மணமேல்குடி, பாபநாசம் பள்ளிகளில் கலைத் திருவிழா

அறந்தாங்கி, அக்.21 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் நடந்த கலைத் திருவிழா நிறைவு நிகழ்ச்சியை அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தொடங்கி வைத் தார். இந்நிகழ்வில் மணமேல்குடி வட்டார கல்வி அலுவ லர்கள், கலைக்குழு உறுப்பினர்கள், அரசுப் பள்ளி தலை மையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் மற்றும் தன்னார் வலர்கள் கலந்து கொண்டனர். பாபநாசம் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி களில் கலைத் திருவிழா நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சியில், பாப நாசம் ஒன்றியத்தைச் சேர்ந்த 28 நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி, மேல் நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில், ஓவியம், சிற்பம், நாட்டுப்புறப் பாடல், வில்லுப் பாட்டு, கும்மி, கிராமிய நடனம், நாடகம் உள்ளிட்டவற்றில் தங்களது திறனை வெளிப்படுத்தினர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) முருகன், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ் மற்றும் ஆசிரி யர்கள் பங்கேற்றனர்.

அரசு மருத்துவமனைகளில் இரவு நேர மருத்துவர் நியமிக்க சிபிஎம் வலியுறுத்தல்

உயிர்க் காக்கும் மருந்துகளை இருப்பு வைத்திடுக!

நாகர்கோவில், அக்.21- அரசு மருத்துவமனையில் 24 மணி  நேரமும் மருத்துவர்கள் வருகையை  உறுதிப்படுத்தி, மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்துகள் அனைத்தும் இருப்பு வைப்பதோடு அதிகரித்து வரும் காய்ச்சலை கட்டுப்படுத்த சிறப்பு பரிசோதனை வசதி ஏற்படுத்த நடவ டிக்கை எடுக்க தமிழக அரசையும், சுகா தார துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிள்ளியூர் கிழக்கு வட்டார வலியுறுத்தியுள்ளது. கருங்கல் அருகே சுண்டவிளை பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், மத்தி கோடு, வெள்ளியாவிளை, ஆலஞ்சி,  மிடாலக்காடு, கருக்கப்பனை, கருமா விளை, செல்லங்கோணம் உள்ளிட்ட கரையோரப்பகுதி மக்கள் மற்றும் மிடா லம், மேல்மிடாலம், ஹெலன்நகர், இனயம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடலோரப்பகுதி மக்கள் என நாள்தோ றும் 300 க்கும் மேற்பட்ட வெளிநோயாளி கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் காலை  7.30 மணி முதல் 12 மணிவரை  மருத்துவர்கள் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கின்றனர். பின்பு வரும்  நோயாளிக்குக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இரவு நேரங்களில் விபத்து  மற்றும் அவசர தேவைகளுக்கு அங்கு  கொண்டு சென்றால் மருத்துவர்கள் இல்லை என திருப்பி அனுப்புகின்றனர். அங்கிருந்து குளச்சல் அரசு மருத்துவ மனை அல்லது ஆசாரிப்பள்ளம் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். நீண்ட  தொலைவு காரணாக அப்பகுதிகளில் உள்ள மக்கள் தனியார் மருத்துவ மனைகளையே நாடி செல்கின்றனர். இதனால் ஏழை, எளிய மக்களின் பொரு ளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இரவு நேரங் களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க  கருங்கல் அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவரை நியமனம் செய்ய  வேண்டும் என அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

காவல் துணை ஆய்வாளர் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

திருநெல்வேலி ,அக். 21- நெல்லை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு  துணை  காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவரது மனைவி  விஜயலெட்சுமி. இவர்களுக்கு கற்பகவிநாயகம் (27), விக்னேஷ் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் விக்னேஷ் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 9-ம்  அணி மணிமுத்தாறு பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வரு கிறார். கற்பக விநாயகத்திற்கு சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூங்க சென்ற கற்பக விநாயகம், வெள்ளிக்கிழமை மாலை வரை கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறையில் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சந்திப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று கற்பக விநாயகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

குருவாயூர், கோவை ரயில்களில்  சிறப்புப் பெட்டிகள் இணைப்பு

திருநெல்வேலி, அக். 21- ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வோருக்காக அக்.24 அன்று நெல்லை யில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. குருவாயூர் உள்ளிட்ட தென் மாவட்ட ரயில்களில் சிறப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்பும் மக்களுக்காக இம்முறை அதிக ரயில்கள் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்படவில்லை. இந் நிலை யில் தெற்கு ரயில்வே தென் மாவட்டங்களுக்கு சிறப்பு  ரயில்களை அறிவித்து இயக்க வேண்டும் என பயணிகள்  தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் தற்போது சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் (06044) நெல்லையில் இருந்து வரும் 24இல்  மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருது நகர், மதுரை, தி் டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம்,  செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூர் சென்று சேருகிறது. ஆயுதபூஜை பண்டிகைக்கால கூட்ட  நெரிசலை சமாளிக்க தென் மாவட்டத்தை சேர்ந்த சில  ரயில்களில் கூடுதல் பெட்டி களும் இணைக்கப்பட்டுள்ளன.  அதன்படி, அக்.22இல் குருவாயூரில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் விரைவு எக்ஸ்பிரசிலும் (16128) ஒரு கூடுதல் 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. மேலும் அக்.24 வரை கோயம்புத்தூரில் இருந்து புறப்படும்  நாகர்கோவில் விரைவு எக்ஸ்பிரஸ் (22668), அக்.25 வரை  நாகர்கோவிலில் இருந்து புறப்படும் கோயம்புத்தூர் விரைவு  எக்ஸ்பிரஸ் (22667) ஆகிய வற்றிலும் கூடுதலாக ஒரு 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. பயணிகள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள தெற்கு  ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

வைகை அணை நீர்மட்டம் 58 அடியை எட்டியது

தேனி, அக்.21- மூல வைகை ஆறு மற்றும் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக் கப்படும் தண்ணீரால் வைகை அணையின் நீர் மட்டம் 58.14 அடியாக உயர்ந் துள்ளது. கடந்த மூன்று நாட்க ளாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணை க்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி முல் லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 123.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 1189 கன அடி நீர் வருகிறது. தண்ணீர் திறப்பு 1322 கன அடி.  வைகை அணையின் நீர்மட்டம் 58.14 அடியாக உள்ளது. 1445 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணை 54.90 அடி. அணைக்கு நீர்வரத்து 70 கன அடி. 100 கன அடி திறப்பு. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 123.98 அடியாக உள்ளது. விரைவில் முழு கொள்ளவை எட்டும். அணைக்கு 25.90 கன அடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்கு 3 கன அடி திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 38.40 அடி.நீர்வரத்து 13 கன அடி உள்ளது. முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுவதால் லோயர் கேம்பில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் இயக்கப் பட்டு மின் உற்பத்தி செய்யப் படுகிறது.

கலைத் திருவிழா போட்டி: வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், அக்.21 - சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நடை பெற்ற, கலைத் திருவிழா போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை சட்டமன்ற உறுப்பினர் பாராட்டினார். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியம் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான  கலைத் திருவிழா போட்டிகள் கடந்த அக்.18  அன்று தொடங்கி அக்.20 வரை நடைபெற்றன. நிறைவு நாளான வெள்ளிக்கிழமை, சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள 6 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். இதில் ஒரு போட்டிக்கு 2 பேர்  வீதம் மொத்தம் 72 பேர் மாவட்ட அளவி லான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  இதைத் தொடர்ந்து, பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி. முத்து மாணிக்கம் ஆகியோர், போட்டியில் வெற்றி  பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினர்.