districts

திருச்சி முக்கிய செய்திகள்

உயர் கல்வியை மாநிலப்  பட்டியலில் சேர்க்க கோரிக்கை

கும்பகோணம், டிச.22- 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தில் சுமார் 4000 உறுப்பி னர்களுக்கு மேல் உள்ளனர். இக்கழகம் கல்வி வளர்ச்சிக்கு சமுதாய வளர்ச்சிக்கும் பணியாற்றி வருகிறது.  தொடர்ந்து ஆண்டு தோறும் மாநில மாநாடுகளை நடத்தி  வருகிறது. இந்த ஆண்டு கும்பகோணத்தில் மூன்றாவது மகளிர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில  தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார்.

மாநாட்டின் நோக்கம் குறித்து பொதுச் செயலாளர் மனோகரன் விளக்கி னார். முன்னதாக தர்மபுரி மண்டல கல்லூரி இணை இயக்குநர் பா.சிந்தியா செல்வி மாநாட்டை தொடக்கி வைத்தார். சென்னை எத்திராஜ் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறை தலைவர் அரங்க மல்லிகா சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில், மகளிரை இழிவுபடுத்தி ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி தொடர் கதைகளை கடும் தணிக்கைக்கு உட்படுத்தி தடை செய்ய வேண்டும். மகளிர் நலம், வாழ்வு ரிமை, பெண்ணுரிமை கொள்கைகளை காக்கும் வகையில்  தேசிய மூத்த மகளிர் நலவாரியம் மற்றும் மாநில மூத்த மகளிர் நல வாரியம் அமைத்திட வேண்டும். 2020 இல்  வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையை முற்றிலும்  திரும்ப பெற வேண்டும். திறன்சார் கல்விக் கொள்கையை தவிர்த்து, அறிவுசார் கல்வியை மேம்படுத்த உயர்கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசுப் பணிகளிலும் ஆட்சிப் பொறுப்புகளிலும் மகளிர் ஒதுக்கீட்டை தவறா மல் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

நெற்பயிரில் விஷ மருந்து தெளிப்பு: பயிர்கள் பட்டுப் போனதாக விவசாயி புகார்
காவல்துறை விசாரணை

தஞ்சாவூர், டிச.22 -  நெல் வயலில் விஷ மருந்தை தெளித்ததால், பயிர்கள் நாசமாகி விட்டன. எனவே, இதில் தொடர்புடையவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி காவல் நிலையத் தில் புகார் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் செருவா விடுதி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மகாராஜா (38). இவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  அந்த மனுவில், “எனக்கு சொந்தமான செருவாவிடுதி வடக்கு கிராமத்தில் உள்ள நிலத்தில் நெல் பயிரிட்டு இருந் தேன். அப்பயிருக்கு காப்பீடும் செய்துள்ளேன். சுமார் மூன்று மாத காலத்திற்கு முன்பு சுமார் 70 செண்டு நிலத்தில்  நெல் பயிர் செய்து, இதுவரை கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய்  செலவும் செய்துள்ளேன்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கதிர்  வர ஆரம்பித்தது.  இந்நிலையில், எங்கள் ஊரைச் சேர்ந்த அருணாசலம் மனைவி மலர் என்பவர், அவருடைய அண்ணன் எம்ஜிஆர்  என்பவரிடமிருந்து நான் விவசாயம் செய்து வரும் நிலத்தை கடந்த 2013 இல் கிரயம் வாங்கியதில் இருந்து, தொ டர்ந்து என்னிடம் பிரச்சனை செய்து வருகிறார். அவரது அண்ணன் அவருக்கு சொத்தில் பங்கு தரவில்லை என என்னி டம் சொன்னார். நீங்கள் இதுகுறித்து உங்கள் அண்ணனி டம் தான் பேச வேண்டும். நான் கிரயம் வாங்கிய நிலத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் என பலமுறை கூறி விட்டேன்.  இந்நிலையில் கடந்த டிச.17 அன்று எனது பயிரைப் பட்டுப்போகச் செய்யும் வகையில், ஏதோ விஷமருந்தை பயிரில் தெளித்துள்ளார்.

தற்போது அனைத்து பயிர்களும் கருகிவிட்டன. இதனை மலர் தூண்டுதலின் பேரில் அவரு டைய மகன் போத்திராஜன், அவருடைய அக்கா மகன் ரவி  ஆகியோர் விஷமருந்தை தெளித்து என்னுடைய வேளாண் மையை கெடுத்து விட்டனர்.  இந்த பயிர் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி, எனது உழைப்பையும், பெரும் பொருளாதாரத்தையும் செல வழித்து விட்டேன். அதனை நம்பி இருந்த நானும், எனது  குடும்பமும் மீள முடியாத துயரத்தில் உள்ளோம். இது போன்ற கொடுமையான செயலைச் செய்த மேற்படி மூன்று நபர்களின் மீதும் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு கடும் தண்டனையும் எனக்கு உரிய நிவாரணமும் உடனடியாக பெற்று தர வேண்டும்” என கூறியுள்ளார்.  

இதுகுறித்து விவசாயி மகாராஜா கூறுகையில், “காவல் துறையில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வேளாண் துறை, கிராம நிர்வாக அலுவலரிட மும் புகார் அளித்துள்ளேன்.  பட்டுக்கோட்டை வருவாய் கோட் டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கும் வாட்ஸ் அப் மூலம் மனு  அனுப்பி உள்ளேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப் பட்டவர்களை கைது செய்ய வேண்டும். எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

காவல்துறை தரப்பில் இதுபற்றி விசாரித்த போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இரு தரப்பையும் அழைத்து விசாரித்து வருகிறோம். மேலும் வருவாய்த்துறை, வேளாண் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என்றனர். 

ஆசை வார்த்தை கூறி 
ரூ.22 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பெரம்பலூர், டிச.22- பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி காந்தலெட்சுமி மற்றும் திருச்சி மாவட்டம், மன்னச்சநல்லூர் தாலுகா வாழையூரைச் சேர்ந்த வர்கள் ஸ்ரீதர் (43), தாமோதரன் (40), இவரது மனைவி நிஷாந்தி ஆகியோர், அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த பானு மதி என்பவரை அணுகி, நீங்கள் தரும் பணத்திற்கு 25 சத வீதம் வட்டி மாதந்தோறும் தரப்படும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனால் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் பானுமதி கடந்த 2020 முதல் 2022 வரை 6 தவணையாக ரூ.22 லட்சம் பணம் தந்துள்ளார். இதற்கு ஆதாரமாக தாமோ தரன் மூன்று முத்திரைத்தாளில் கடன் ஒப்பந்தம் செய்து கையொப்பமிட்டு வழங்கியுள்ளார். ஆனால் வட்டி தொகை வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் தனியார் வங்கி யின் ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.7 லட்சம் தொகைக்கான செக் கொடுத்தும், பணம் இல்லையென அந்த செக் திரும்பி  வந்தது.

இதனால் பண மோசடி செய்தது தெரியவந்தது.   பாதிக்கப்பட்ட பானுமதி கொடுத்த புகாரின்பேரில் பெரம்ப லூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தினர். இதையடுத்து ஸ்ரீதர், காந்தலெட்சுமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில்  தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

ஆளுநர் விருப்பப்படி எல்லாம் செய்ய முடியாது!
சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை, டிச.22 - பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் கள் தெரிவு செய்யப்படும் விவகாரத்தில் ஆளுநர் விருப்பப்படி எல்லாம் செய்ய முடி யாது என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர்  எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவுக்குழுவில் ஆளுநர்  விருப்பப்படி எல்லாம் செய்ய முடியாது. சட்ட விதிமுறைகளின்படிதான் தெரிவுக்குழுக் கள் அமைக்கப்படுகின்றன. நீதிமன்றத் துக்குப் போனால், நீதிமன்றம் அரசின் முடிவை ரத்து செய்யும் என்று ஆளுநர் தெரி வித்திருக்கிறார். நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு நியாயத்தை, வாதத்தை எடுத்து வைப்போம். ஆளுநரை மாற்ற வேண்டும் எனக் கோரினால், அவர் இன்னும் உறுதியாக அமர்ந்து கொள்வார்; எனவே அவரை மாற்ற வேண்டும் எனக் கோர மாட்டோம். கோவை பாஷாவின் இறுதிச் சடங்கில் மக்கள் திரளாகப் பங்கேற்றதை அரசால் தடுக்க முடியாது. தண்டனைக் காலம் முடிந்து  வெளியே வந்தவர் அவர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவே காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. கொலைகள், குற்றச் சம்பவங்கள் எங்கா வது நடைபெறும் என முன்பே எதிர்பார்க்க  முடியாது. குற்றம் நடந்தவுடன் அரசு எப்படி  நடவடிக்கை எடுக்கிறது என்பதைத் தான்  பார்க்க வேண்டும். திருநெல்வேலி சம்பவத் தில் 2 மணி நேரத்தில் 4 குற்றவாளிகளைக் கைது செய்திருக்கிறோம். சமூக விரோதி கள், குற்றவாளிகளை எல்லாம் உறுப்பினர் களாக சேர்த்துக் கொண்ட கட்சி பாஜக தான். ஏற்கனவே இந்தப் பட்டியலை வெளி யிட்டுள்ளோம்” என்றார்.

சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு சான்றிதழ்

தஞ்சாவூர், டிச.22 -  தஞ்சாவூர் காவல் சரகத்தில், சிறப்பாகப் பணி யாற்றிய காவல் அலுவலர்கள், காவலர்களுக்கு மத்திய மண்டல காவல் தலைவர் க.கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார்.  தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில், 2024 ஆம் ஆண்டில் சிறப்பாகப் பணியாற்றிய, தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த 57 காவல் அலு வலர்கள், காவலர்களுக்கு மத்திய மண்டல காவல் தலைவர் க.கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார். இதேபோல, தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்  என காவல்துறை தலைவர் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் சரகக் காவல் துணைத்  தலைவர் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆஷிஷ் ராவத் (தஞ்சாவூர்), எஸ்.ஜெயக்குமார் (திருவாரூர்), ஆ.கு.அருண் கபிலன்  (நாகை), ஜி.ஸ்டாலின் (மயிலாடுதுறை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.