districts

img

தார்ச் சாலை அமைத்துத் தர கோரிக்கை

சீர்காழி, அக்.2 -  மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர் மெயின் சாலையி லிருந்து அக்ரஹாரம் மற்றும் மேலத்தெரு ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரு கி.மீட்டர் தூர மண் சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி, குண்டும் குழியுமாக மாறிவிடு கிறது. இந்த தெருக்களில் சுமார் 200 வீடுகளில்  மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்கு  செல்லும் சாலை தற்போது வரை மண் சாலையா கவே உள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் எருக்கூர் கிராமத்திலிருந்து நெல் மூட்டைகள், பஞ்சு மூட்டைகள் மற்றும் வைக்கோல் உள்ளிட்டவைகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச் செல்லும் போது மிகவும் சிரமம் அடைகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி, மண் சாலையை தார்ச்சாலை யாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

;