districts

img

புதிய சாலை அமைக்கக் கோரிக்கை

பாபநாசம், ஜூலை 10-            தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி பகுதிக் குட்பட்ட கீழ செங்குந்தர் தெரு, மேல செங்குந்தர் தெரு வில் சாலைப் போட்டு பத்து  வருடங்களுக்கு மேல் ஆகிறது. குண்டும், குழியுமான இந்த சாலையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.