districts

திருச்சி முக்கிய செய்திகள்

நூலகத்திற்கு புதிய  கட்டடம் கட்ட கோரிக்கை

திருவாரூர், அக்.17 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் கிளை நூல கத்தில் வாசகர் வட்ட கூட்டம்  புதன்கிழமை நடைபெற்றது.  கூட்டத்திற்கு வாசகர் வட்டத் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கார்த்தி முன்னிலை வைத்தார். கூட்டத்தில் குடவாசல் கிளை நூலகர்கள் திருநா வுக்கரசு, சரவணன் மற்றும்  துணைத் தலைவர்கள், புரவலர்கள் மற்றும் உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். குடவாசல் கிளை நூல கம் அமைந்துள்ள இடம், பேரூராட்சி நிர்வாகத்திடம் இருந்து நூலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே பழைய நூலக கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட உடனே நடவடிக்கை எடுக்க வேண் டும். நூலகத்திற்கு செல்ல  சாலை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.

அமைச்சர் ஆய்வு

அரியலூர், அக்.17 - ஆண்டிமடத்தில் கலை ஞர் சிலை அமைக்கும் இடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் ஆய்வு  செய்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றிய அலுவலக கட்டி டம் கட்டும் பணியையும், ஆண்டிமடம் திமுக ஒன்றிய அலுவலகத்தில், திறக்கப்பட உள்ள முன்னாள் முதல்வர் கலை ஞரின் சிலை அமைப்ப தற்கான இடத்தையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் பார்வையிட்டார். ஜெயங்கொண்டம் சட்ட மன்ற உறுப்பினர் க.சொ. க.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

போக்சோவில் ஒருவர் கைது

அரியலூர், அக்.17-  ஜெயங்கொண்டம் அருகே 9 வயது சிறு மிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தச்சுத் தொழி லாளியை அனைத்து மக ளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே  கழுவந்தோண்டி கிராமம் வடக்கு காலனி தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் (36). தச்சு தொழில் செய்து வரும் இவர், 9 வயது சிறுமி ஒருவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, தனியே ஓரிடத்தில் பாலி யல் தொந்தரவு கொடுத் துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித் தனர். அதன் பேரில், அனைத்து மகளிர் போலீ சார் ஐயப்பன் மீது வழக்குப்  பதிந்து போக்சோ சட்டத்தில்  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

எஸ்.பி. அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம்

அரியலூர், அக்.17 - அரியலூரில் உள்ள  மாவட்ட காவல் அலுவ லகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் புதன் கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் தலைமை  வகித்து, பொதுமக்களிட மிருந்து குறைகளை கேட்டு, அவர்களிடமிருந்து 13 மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர், அந்த மனுக்கள் மீது உரிய விசா ரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டார்.

சிபிஎம் கொடியை அகற்ற கூறி  தகராறு செய்தவர் மீது புகார்

கரூர், அக்.17 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி தலைமையில் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.சுப்பிரமணியன், ஆர்.ஹோச்சுமின் ஆகியோர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தனர். அம்மனுவில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகர 9 ஆவது மாநாடு கடந்த அக்.13 அன்று ராயனூரில் உள்ள வள்ளியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக எங்களது கட்சியின் கொடியை மாநகராட்சிக்கு சொந்தமான சாலைகளில், ராயனூர் பேருந்து நிறுத்தம் முதல் மாநாடு நடைபெறும் வள்ளியம்மன் திருமண மண்டபம் வரை கட்டியிருந்தோம். அப்போது மண்டபத்திற்கு வந்த ராயனூரைச் சேர்ந்த பாபு என்பவர், சாலையின் ஓரத்தில் கொடியை கட்டக் கூடாது. ஊர் கட்டுமானம் அமலில் உள்ளது. இன்னும் 10 நிமிடத்தில் கட்சியின் கொடிகளை அகற்ற வேண்டும். அகற்றாவிட்டால் நீங்கள் இங்கு மாநாடு நடத்த முடியாது என்று சில ரவுடிகளுடன் வந்து மிரட்டல் விடுத்தார்.  இதனை கண்டித்த கட்சியினர் மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் கொடியை கட்டியிருக்கிறோம்; கொடியை அகற்ற முடியாது என்று கூறியதற்கு, மாநகராட்சியின் ஊழியர்களை வைத்தே கொடிகளை அப்புறப்படுத்துவேன் என்று எங்களை பாபு மிரட்டினார்.  மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சியின் கொடியை அகற்ற வேண்டும் என ரவுடிகளை வைத்து எங்களுக்கு மிரட்டல் விடுத்த பாபு மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ராயனூரில் ஊர் கட்டுமானம் அமலில் இருப்பது குறித்து விசாரணை மேற்கொண்டு ஊர் கட்டுமானத்தை ரத்து செய்ய வேண்டும். ராயனூர் பகுதிகளில் கட்சி கொடிகளை கட்டி ஜனநாயக பூர்வமான இயக்கங்கள் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகரக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என கூறியிருந்தனர்.

கடனை செலுத்திய நிலையில்  அசல் ஆவணங்களை வழங்காமல் அலையவிட்ட  வங்கி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

தஞ்சாவூர், அக்.17 - தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு நா கேஸ்வரி என்ற மனைவியும், சிவக் குமார், அமிர்தலிங்கம், ராமச்சந்திரன் என்ற மகன்களும், கோகிலாதேவி என்ற மகளும் உள்ளனர்.  இந்நிலையில், சுப்பையா கடந்த  2013 டிச.11 அன்று மற்றும் 2014 நவ.18  அன்று என இரண்டு முறையாக, தஞ்சா வூர் கத்தோலிக் சிரியன் வங்கியில், தனக்கு சொந்தமான 1912.5 சதுர அடி  இடமும், அதில் கட்டப்பட்டுள்ள வீட்டின்  ஆணவங்களை அடமானம் வைத்து 12 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.  இதற்காக உரிமை மூல ஆவ ணங்கள் ஒப்படைப்பு பத்திரத்தை எழுதி தஞ்சாவூர் மாவட்ட பதிவாளர் அலு வலகத்தில் பதிவு செய்து வங்கியில் வைப்பீடு செய்திருந்தார். மேலும், சுப்பையா பெற்ற கடனுக்காக 15 ஆயி ரம் ரூபாய் வீதம் வங்கிக்கு தவணை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018 ஆம்  ஆண்டு மார்ச் 26 அன்று சுப்பையா  இறந்துவிட்டார். இதையடுத்து சுப்பை யாவின் இறப்பு சான்றிதழையும், வாரிசு  சான்றிதழையும் பெற்று அவரது வாரிசுதாரர்கள் வங்கியில் தாக்கல் செய்தனர். மேலும், இறந்துபோன சுப்பையாவின் வாரிசுதாரர்கள் என்பதை  ஊர்ஜிதம் செய்ய அனைவரும் கை யொப்பமிட்ட கடிதம் ஒன்றினையும், அதே தேதியில் வங்கியில் கொடுத்துள் ளனர். இதையடுத்து வங்கியில் சுப்பையா வழங்கியிருந்த அசல் ஆவ ணங்களையும், சுப்பையா கடன் தொ கையில் காப்பீடு கட்டணம் பிடித்தம்  செய்யப்பட்டதற்கான ஆவணங்க ளையும் வழங்க கோரிக்கை வைத்த னர். ஆனால் கத்தோலிக் சிரியன் வங்கி  மேலாளர், உரிய அசல் ஆவணங்களை வழங்காமலும், கடன் முழுவதையும் அடைக்கப்பட்டதற்கான ‘கடன் நிலு வையில்லா சான்றிதழையும்’ வழங்கா மல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.  இதனால் வங்கிக்கு பலமுறை அலைந்த சுப்பையா மனைவி மற்றும்  மகன்கள் தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தில் புகார் மனு  தாக்கல் செய்தனர். புகாரினை புதன் கிழமை விசாரணை செய்த, ஆணையத்  தலைவர் த.சேகர், ஆணைய உறுப்பி னர் கே.வேலுமணி ஆகியோர் வங்கி நிர்வாகம் அசல் ஆவணங்களை 45  தினங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்  அல்லது ஒருவேளை அசல் ஆவ ணங்கள் கிடைக்கப் பெறாவிட்டால், அசல் ஆவணங்கள் சம்பந்தமாக ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுக்க வேண்டும்.  மேலும், தஞ்சாவூர் மாவட்ட பதிவா ளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட உரிமை மூல ஆவணங்கள் ஒப்படைவு  பத்திரத்தினை ரத்து செய்து, அடமான வரவு ரசீது, கடன் நிலுவை யில்லா சான்று வழங்க வேண்டும். நிலு வைத்தொகையை செலுத்திய ஐந்து  வருடங்களுக்குப் பிறகும் ஆவ ணங்கள் கிடைக்கப் பெறுவதற்காக அலைக்கழிக்கப்பட்டு, மன உளைச்சல்  ஏற்படுத்தியதற்காக 10 லட்சம் ரூபாய்  இழப்பீடு தொகையை கடந்த 2019  ஆம் ஆண்டு நவ.7 முதல் இழப்பீடு தொகையை வழங்கும் நாள் வரை  9 சதவீத வட்டியுடனும், வழக்கு செல வுக்காக 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை: தளவாட பொருட்கள் ஆய்வு

அரியலூர் அக்.17- ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாக தளவாட பொருட்களை ஆணையர் ஆய்வு செய்தார். தமிழகமெங்கும் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அந்தந்தப் பகுதியில் ஆறு, குளங்கள், பெரிய ஏரிகள் போன்றவற்றில் நீர் நிரம்பி  வெளியேறாத வண்ணம் மணல் மூட்டைகள், பொது மக்களுக்கான உணவுப் பொருட்கள், படகுகள் உள்ளிட்ட வற்றை அந்தந்த துறையினர் பாதுகாப்பாக இருப்பில் வைத்துள்ளனர். இவற்றை அந்தந்த துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.  இந்நிலையில் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வட கிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான பல்வேறு தளவாடப் பொருட்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதை ஜெயங்கொண்டம் நக ராட்சி ஆணையர் அசோக்குமார் ஆய்வு செய்தார்.

பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க கோட்டாட்சியர் ஆய்வு

தஞ்சாவூர், அக்.17 -  தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, தமிழகம் முழுவதும் பட்டாசு தொழிற்சாலைகளில் பட்டாசு கள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது.  இதை மொத்தமாக வாங்கிச் சில்லறைக்கு விற்பனை  செய்யும் வியாபாரிகள், பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்ய உள்ளனர். இதையொட்டி பேராவூரணியில் சில்லறை விற்பனை செய்யும் பட்டாசு கடைகளை பட்டுக் கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ ஆய்வு மேற் கொண்டார். ஆய்வின்போது உரிமம் பெறப்பட்டுள்ள தளத்தில்  மட்டும் விற்பனை செய்ய வேண்டும். போதுமான தீய ணைப்பு கருவிகள் இருக்க வேண்டும். தண்ணீர் பேரல்களை வைத்திருக்க வேண்டும். மணல் மூட்டை கள் வைத்திருக்க வேண்டும். மின்சார வயர்களை முறை யாக பராமரித்திருக்க வேண்டும். பட்டாசு உரிமம் பெற்றுள்ள கடைகளில் இருவழிப்பாதை அவசியம் இருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகளை எப்படி  இயக்க வேண்டும் என விண்ணப்பித்துள்ள உரிமைதார ரையும், தொழிலாளர்களையும் கேட்டறிந்தார்.

சேதுபாவாசத்திரம் அருகே  தடுப்பணை பணிகள் ஆய்வு

தஞ்சாவூர், அக்.17 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தே வன் ஊராட்சி, சோமநாதன்பட்டினம் முடியனாறு காட்டாற்றின் குறுக்கே, நீர்வளத்துறை சார்பில் ரூ.9.62 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கப்பட்டு வரு கிறது.  இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரு கின்றன. இதனை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து  நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் திருவள்ளு வன், உதவிப் பொறியாளர் பிரசன்னா ஆகியோர் வரை படம் மூலம் விளக்கிக் காட்டினார்.  தொடர்ந்து குப்பத்தேவன் அரசு உயர்நிலைப் பள்ளி யில், நபார்டு வங்கி உதவியுடன் ரூ.85.44 லட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடப்  பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அதனையும் சட்டப்பே ரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ஆய்வு செய்தார்.

இரவு ரோந்துப் பணியில் இருந்த காவலர் மீது பெப்பர் ஸ்பிரே அடிப்பு இருவர் கைது - சிறை

கரூர், அக்.17 - கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் அரவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகே  புதனன்று அதிகாலை 1.30 மணிக்கு அரவக்குறிச்சி காவல்  நிலைய தலைமை காவலர் சரவணன் மற்றும் ஊர்க்கா வல் படை வீரர் பிரபு ஆகியோர் இரவு ரோந்து பணி யில் இருந்தனர்.  அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த  இருவரை நிறுத்தி விசாரித்த போது, திடீரென அதில்  ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை  எடுத்து மேற்படி காவலர்கள் மீது அடித்து விட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அவர்களை மடக்கிப் பிடித்து அரவக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து  கரூர் ஊரக உட்கோட்ட குற்ற பிரிவினர் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் விளார் சாலையைச் சேர்ந்த கோகுல் மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த கோகுல்நாத் என தெரிய வந்தது.  மேற்படி நபர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், அதில் 2 இரும்பு ராடுகள், திருப்புலி, மாஸ்க்,  கிளவுஸ், பெப்பர் ஸ்பிரே மற்றும் 2 லிட்டர் பெட்ரோல் வைத்திருந்தனர். அவர்கள் அரவக்குறிச்சி மற்றும் வெள்ளியணை பகுதிகளில் வீடுகளை உடைத்து திருடுவ தற்காக வந்தது தெரியவந்தது.    கோகுல் என்பவர் மீது திருச்சி, அரியலூர், புதுக் கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 24 வழக்கு களும், கோகுல்நாத் என்பவர் மீது திருச்சி மாவட்டத் தில் 4 வழக்குகளும் உள்ளன.  இருவர் மீதும் வெள்ளி யணை காவல் நிலையத்தில் வியாழனன்று வழக்குப் பதியப் பட்டு, இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 

அரிய வகை வன உயிரினமான  கீரியை வலை வைத்து பிடித்த மூவர் கைது

தஞ்சாவூர், அக்.17 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட பேராவூரணி அருகே அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை உயிரினமான கீரிப்பிள்ளைகளை கண்ணி வைத்து இறைச்சிக்காக பிடித்த மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.  பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம் பகுதியில் சிலர் கண்ணி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், வனவர் சிவசங்கர், வனக்காப்பாளர் பாரதிதாசன், மணவாளன் ஆகியோர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.  இதில் அப்பகுதியில் பேராவூரணியை அடுத்த செங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீ.அஜித் குமார் (27), செ.பிரபு (39), அ.சுரேஷ் (31) ஆகியோர் கண்ணி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து உயிரிழந்த நிலையில் இரண்டு கீரிப்பிள்ளைகளை கைப்பற்றிய வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.  பின்னர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அக்.22-இல் பெரம்பலூர் வருகை

பெரம்பலூர், அக்.17 - தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  அரசுத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங் களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத் துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு 22.10.2024 அன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகிறார். இதனால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்,  தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், முதலமைச்சரின் தனிப் பிரிவின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது  எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து வட்டம் வாரியாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. வரு வாய்த் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங் கள், பல்வேறு முகாம்களில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள், இது வரை வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பட்டா மாற்ற ஆணை கள், இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சான்றுகள் வேண்டி விண்ணப்பிக்கப் பட்டுள்ள கோரிக்கைகளுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை மூலம் கலைஞ ரின் கனவு இல்லம் திட்டம் மூலம் கட்டப்பட்டு  வரும் வீடுகள், பணிகள் முடிக்கப்பட்ட வீடு கள் குறித்த தகவல்கள், பிற திட்டங்கள் மூலம் கட்டப்படும் வீடுகளின் பணி முன்னேற் றம், வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத்துறை, மாவட்ட தொழில் மையம், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியர் விரிவாக ஆய்வு செய்தார்.