மயிலாடுதுறை/கரூர், ஜன.28 - மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வீ.ரமா தலைமை யில் விழா நடைபெற்றது. பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வ நாதன், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்திலும் எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் தேசிய கொடியை ஏற்றினார். ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினிஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் பள்ளி மாணவர் களுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. கரூர் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத் தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபா கர் உள்ளார். வங்காரம்பேட்டை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டை அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளித் தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெயராஜ் தலைமை வகித் தார். திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதே போன்று பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடந்த குடியரசு தின நிகழ்ச்சியில் லயன் பார்த்திபன், பள்ளித் தலைமையாசிரி யர் ரமேஷிடம் புதிய தொலைக்காட்சியை வழங்கினார். பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவரும், ஆப்பிள் ஷாப் உரி மையாளருமான ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், பொருளாளர் ஜோதி, நவநீத கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சாப் ஜான், முன்னாள் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழன் பசுமை கரங்கள் சார்பில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப் பட்டது.