districts

img

அரசு அலுவலகங்களில் குடியரசு தின கொண்டாட்டம்

பெரம்பலூர், ஜன.28 - பெரம்பலூரில் நடந்த குடியரசு தின விழாவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, 190 பயனா ளிகளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி கள் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடி வேல்பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரம்பலூர் மாவட்டக் குழு அலுவலகத்தில் 76 ஆவது குடியரசு தின  கொடி ஏற்று விழா நடைபெற்றது. பெரம்பலூர் நகர செய லாளர் எ.இன்பராஜ் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தேசிய கொடியை ஏற்றி  வைத்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் என்.செல்லத்துரை, எ.ரெங்கநாதன், பெரம்ப லூர் ஒன்றியச் செயலாளர் பி.பெரியசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.கோகுலகிருஷ்ணன், ஆட்டோ சங்க  மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், சிஐடியு மாவட்ட  குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, பழவண்டி செல்லத்துரை, அலுவலக செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி, செம்ப னார்கோவில், பொறையார் பகுதிகளிலுள்ள அரசு அலு வலகம் மற்றும் கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. செம்பனார்கோவிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் வீ.ரமா தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பி.எம்.  அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட பரிசு தொகையை  வழங்கினார்.  தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற குடியரசு தின விழாவில் வட்டாட்சியர் மகேஷ்  தேசிய கொடியை ஏற்றி வைத்தார். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். பொறையார் சர்மிளா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளரும், முதல்வருமான பாண்டியராஜன் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார். தரங்கம்பாடி ஜான்சன் நினைவு மேல்நிலைப்  பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர்  ஜான் சைமன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.  தொடர்ந்து பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா (ஊராட்சிகள்) தலைமை வகித்தார்.இதில் எம்எல்ஏ நிவேதா முருகன்  பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றி யத் தொடக்கப் பள்ளியில் தேசியக் கொடியை பள்ளித்  தலைமை ஆசிரியர் ரமேஷ் ஏற்றினார். இதில் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் செந்தில், எஸ்.எம்.சி  தலைவி புவனேஸ்வரி, உறுப்பினர்கள், உதவி ஆசிரியை அமுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பாபநாசம் வட்டார வளமையத்தில் தேசியக் கொடியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ)  முருகன் ஏற்றினார். பாபநாசம் வங்காரம்பேட்டை அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் தேசியக் கொடியை பள்ளித் தலைமை ஆசிரியை தீபா ஏற்றி னார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜெய ராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு கள் வழங்கப்பட்டன. பாபநாசம் ரோட்டரி சங்க கட்ட டத்தில் தேசியக் கொடியை தலைவர் சக்திவேல் ஏற்றி னார். இதில் செயலர் ரவி, உதவி ஆளுநர் அறிவழகன்,  முன்னாள் உதவி ஆளுநர் செந்தில்நாதன் உட்பட பலர் பங்கேற்றனர். பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடியை தலைவர் செந்தில் ஏற்றினார். செயலர் பன்னீர்செல்வம், பொரு ளாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  பாபநாசம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பாபநாசம் பேரூராட்சி தலைவி பூங்குழலி முன்னிலையில், மனித நேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா தேசியக் கொடியை ஏற்றி னார். பாபநாசம் எம்.எல்.ஏ வின் நேர்முக உதவியாளர் முஹமது ரிபாயி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாபநாசம்  பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியை  செயல் அலுவலர் ரவி ஷங்கர் ஏற்றினார். பேரூராட்சித்  தலைவி பூங்குழலி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  பாபநாசம் நீதிமன்றம், கிளைச் சிறையில் தேசியக்  கொடியை நீதிபதி அப்துல் கனி ஏற்றினார். பாபநாசம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தில் தேசியக் கொடியை  மூத்த உறுப்பினர் கோவிந்தராஜன் ஏற்றினார். மாவட்டப் பொருளாளர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.