districts

img

மின்வாரியத்தை பிரிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

சேலம், மார்ச் 11- மின்வாரியத்தை இரண்டாக பிரிக்கும் அரசாணைகளை தமிழ் நாடு அரசு உடனடியாக ரத்து  செய்ய வேண்டும் என வலியுறுத்தி,  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை  நிர்வாகித்துவரும் டான்ஜெட்கோ அமைப்பை இரண்டாகப் பிரிக்கும், தமிழக அரசாணைகள் 6 மற்றும் 7யை உடடினயாக திரும்பப்பெற வேண்டும். ஓய்வூதிய மற்றும்  பணியாளர்களுக்கு பாதுகாப்பில் லாத ஒப்பந்தத்தை ரத்து செய்ய  வேண்டும். பிரதமரின் சூரிய மின் சக்தி திட்டத்தை செயல்படுத்த மின் ஊழியர்களை நிர்பந்திக்கக்கூ டாது. கணக்கீட்டு பணியை மேற் கொள்ளும் ஊழியர்களுக்கு ‘டேப்’  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பு (சிஐடியு) சார்பில், மேட்டூர் அனல் மின் நிலையம்  முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் கிளைத் தலைவர் கே.சண்மு கம் தலைமை வகித்தார். இதில் அமைப்பின் மாநில துணைத் தலைவர் வீ.இளங்கோ, கிளைச் செயலாளர் எஸ்.செந்தில் வேலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஜெ.ரமேஷ் பாபு நன்றி கூறினார். நாமக்கல் இதேபோன்று முத்தரப்பு ஒப் பந்தத்தில் ஓய்வூதியம் வழங்கிட  நிபந்தனையற்ற உத்தரவாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி,  மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல  அமைப்பின் நாமக்கல் மற்றும்  கரூர் கிளை சார்பில், நாமக்கல்  மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு தர்ணா நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் கிளைத் தலைவர் குப்பண்ணன் தலைமை வகித்தார். கரூர் கிளைச்  செயலாளர் கந்தசாமி துவக்க உரை யாற்றினார். இதில் அமைப்பின் மண்டலச் செயலாளர் எம்.காளி யப்பன் உட்பட பலர் கலந்து கொண் டனர்.