மாணவர் சங்கம் வலியுறுத்தல் திருச்சிராப்பள்ளி, பிப்.20- துவாக்குடி அரசு கல்லூரி எதிரே இயங்கிக் கொண்டிருக்கும் அரசு மதுபானக் கடையை விரைவில் இட மாற்றம் செய்ய வேண்டுமென மாண வர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருச்சி மாவட்டம் துவாக்குடி அரசு கலைக் கல்லூரியின் கிளை மாநாடு பெல் சிஐடியு அலுவலகத்தில் நடை பெற்றது. மாநாட்டிற்கு கிளைத் தலை வர் அபிநயா தலைமை வகித்தார். துணைத் தலைவர் அபி வர வேற்றார். மாணவர் சங்க திருச்சி புற நகர் மாவட்டத் தலைவர் வைரவள வன் துவக்க உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் ஜி.கே.மோ கன் சிறப்புரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் சூர்யா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பால குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துவாக்குடி அரசு கலைக் கல் லூரிக்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும். குடிநீர் வசதியை மேம்படுத்தி தர வேண்டும். கல்லூரிக் குள் செயல்பட்டுக் கொண்டிருந்த மாணவியர் விடுதியினை சீரமைத்து மீண்டும் மகளிர் விடுதியை பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கல்லூரி சிற்றுண்டியில் தரமான உணவுகள் வழங்க வேண்டும். கல்லூரி வளாகத்திற்குள் இருக் கக் கூடிய கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கல்லூரி எதிரில் இயங்கிக் கொண்டிருக்கிற அரசு மதுபான கடையை விரைவில் இடம் மாற்றம் செய்ய வேண்டும். அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிளைத் தலைவராக அபிநயா, துணைத் தலைவர்களாக ஆதி.மாதவன், ரஞ்சித், செயலாளராக கௌதம், துணைச் செயலாளர்களாக ராஜேஷ், துளசிநாதன், தனுஷ் மற்றும் செயற் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட்டனர். இந்திய மாணவர் சங்க திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஆமோஸ் நிறைவுரையாற்றினார். ராஜேஷ் நன்றி கூறினார்.