districts

டாஸ்மாக் கடையை அகற்றுக! மாணவர் சங்கம் மனு

திருச்சிராப்பள்ளி, ஏப்.10- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்களன்று நடைபெற்றது.  கூட்டத்தில் ஆட்சியரின் நேர்முக உதவி யாளரிடம் இந்திய மாணவர் சங்க திருச்சி புறநகர் நிர்வாகி வைரவளவன் மனு கொடுத் தார். அந்த மனுவில், ‘‘திருச்சி துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடை அரசு விதியை மீறி  செயல்படுவதால் மாணவர்களுக்கு மிகவும்  தொந்தரவாக உள்ளது. எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும்’’ என   கூறப்பட்டிருந்தது. இதேபோன்று மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.கே.மோகன் அளித்த  மனுவில், ‘‘திருச்சி அரசு சட்டக்கல்லூரி அமைந்துள்ள பிரதான சாலை நெடுஞ்சாலை  கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதியில் வாக னங்கள் அதிவேகமாக வருகிறது. இதனால் விபத்துகள் அடிக்கடி ஏற்ப்படுகிறது.  எனவே, சட்டக்கல்லூரி மற்றும் பாரதி தாசன் பல்கலைக்கழகம் பகுதிகளில் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேக கட்டுப்பாடு அரண் அமைக்க  வேண்டும்’’ என கூறியிருந்தார்.  மனுவை வழங்கும் போது, சட்டக் கல்லூரி கிளை தலைவர் அழகு ராஜா, மாவட்டத் தலைவர் சூரியா, மாவட்ட துணைத் தலைவர் ஹரி ராமசந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் பிரகதிஷ்வரன் ஆகியோர் உட னிருந்தனர்.