districts

img

ராட்சத கதண்டு கூடு அகற்றம்

அறந்தாங்கி மார்ச் 2-  புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் அருகே, ஒட்டாங்கரை கிராமத்தில் 4 மாதங்களுக்கும் மேலாக உள்ள மிகப்பெரிய கதண்டு கூட்டை அகற்ற வேண்டும் என ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்தில், மனு வழங்கப்பட்டது இதைத்தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக கதண்டு கூட்டை அகற்றினர். கதண்டு கூடு உள்ள பகுதி காமாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாகவும், ஒட்டாங்கரை கிராம குடியிருப்புகளுக்கு செல்லும் வழியாகவும் இருந்தது. எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன் பாதுகாப்பான முறையில் இந்த கதண்டு கூட்டை அப்புறப்படுத்தி தருமாறு கடந்த செவ்வாய்க்கிழமை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு நிலையத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் பாதுகாப்பான முறையில் தீயிட்டு கொளுத்தி கதண்டு கூட்டை அகற்றினர். நான்கு மாதங்களுக்கும் மேலாக மக்களை அச்சுறுத்திய கதண்டு கூட்டை அகற்றிய பிறகு மக்கள் நிம்மதி அடைந்தனர்.