கரூர், ஜன.20- திருமெய்ஞானம் தியாகிக ளான அஞ்சான், நாகூரான், ஞான சேகரன் ஆகியோரின் நினை வேந்தல், உறுதிமொழி ஏற்பு கூட்டம் கரூரில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. உறுதிமொழி ஏற்பு கூட்டத்தி ற்கு சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவர் வி.பால சுப்பிரமணியம் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட செயலாளர் சி.முருகேசன், வி.தொ.ச மாவட்ட செயலா ளர் இரா.முத்துச்செல்வன், கட்டு மான சங்க மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.வி.கணேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர்கள் ஆர்.ஹோசிமின், தரைக்கடை, தள்ளுவண்டி தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.தண்டபாணி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.ராஜா ஆகியோர் உரையாற்றினர். கட்டுமானச் சங்க நிர்வாகி கள் வி.கந்தசாமி, ப.சரவணன், பி.ராஜீவ்காந்தி, எம்.ராஜலட்சுமி, சுரேஷ், ராபின், வாசுகி, போக்குவர த்து சங்கம் ஆர்.கே.ரமேஷ், மாற்றுத் திறனாளிகள் சங்கம் கண்ணகி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். தோகைமலை ஒன்றியம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தோகைமலை ஒன்றியக்குழு சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சக்திவேல் தலை மை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றிய செயலாளர் ஏ.பெரு மாள், விதொச மாவட்டக் குழு உறுப்பினர் டி.இளங்கோவன், விச ஒன்றிய பொருளாளர் ஏ.முனி யப்பன், விதொச ஒன்றிய செய லாளர் ஆர்.சங்கபிள்ளை ஆகி யோர் பேசினர். சங்க ஒன்றிய நிர் வாகிகள் ஏ.சுப்பிரமணி, வடிவேல், பாலு, ரமேஷ், பாலகிருஷ்ணன், செல்வராஜ், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.