புதுக்கோட்டை, ஆக.18 - சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும் பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியை சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார். புதுக்கோட்டை வட்டம், வடவாளம், சொரியன் தெருவைச் சேர்ந்த ரெங்கசாமி மனைவி மாரிக்கண்ணு (46). கடந்த 7.8.2024 அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்ற போது வாகன விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாரிக்கண்ணுவின் உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் தானமாக வழங்கப்பட்டு, அவ ரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத் தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் முதலமைச்சரின் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலையை வெள்ளிக் கிழமை வாரிசுதாரரிடம் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் மு. அருணா, வட்டாட்சியர் பரணி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மு.க.ராம கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.