districts

img

இளைஞருக்கு மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை?

மயிலாடுதுறை, ஜூலை 12 - பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவடந்தை கிராமத்தில் விஷம் கலந்த மதுவை குடித்து வாலிபர்  இறந்த வழக்கில், திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட தாகக் இறந்தவர் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பில்லாவிடந்தை கிராமத்தை சேர்ந்தவர்  ஜோதிபாசு (32). இவர் தனது மனைவியை பிரித்து வாழ்ந்து வந்த நிலையில், மன உளைச்சலால் கடந்த ஜூலை 9 அன்று மாலை மதுவில் விஷம் கலந்து குடித்தார்.  அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு (24)  என்பவர் ஜோதிபாசு வைத்திருந்த விஷம் கலந்த மதுவை குடித்துள்ளார். இதனால் இருவரும் மயி லாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ஜெரால்டு ஜூலை 9 அன்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் காவல் நிலையத்தில் மர்மச் சாவு என்று  வழக்குப் பதிந்து ஜெரால்டு உடலை கூறாய்வு செய்து வியாழனன்று அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். ஜோதிபாசு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் வியாழனன்று மதியம் பில்லா விடந்தையில் இருந்து, இறந்த ஜெரால்டு உடலை பிரிசர் பாக்சுடன் செம்பனார்கோவில்-நல்லாடை மெயின் ரோடு கடலி பாலத்தில் வைத்து ஜெரால்டை திட்டமிட்டு கொலை செய்த ஜோதிபாசு மீது கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்ய வேண்டும். இறந்தவர்  குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறி உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல்  போராட்டம் நடத்தினர். இதுகுறித்து வழக்கறிஞர் சங்கமித்திரன் கூறுகை யில், “ஜெரால்டு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆனால் தொலைக்காட்சிகளில் தவறான செய்தி  வெளியிடப்பட்டுள்ளது. கணவரை பிரிந்து வாழும்  பெண்ணுடன் ஜெரால்டு, ஜோதிபாசு இருவருக்கு மிடையே பழக்கம் இருந்துள்ளது. இதில் முன்விரோதம் இருந்ததால் ஜோதிபாசு திட்டமிட்டு மதுவில் விஷத்தை  கலந்து ஜெரால்டுக்கு கொடுத்து கொலை செய்துள்ளார்.  இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து ஜோதிபாசுவை கைது செய்ய வேண்டும். மேலும் இறந்த  ஜெரால்டு குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க  வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இறந்த  ஜெரால்டு உடலை வைத்து போராட்டம் நடத்தப் போவ தாக கூறியதும், போலீசார் தடுத்து நிறுத்தி, நாங்கள் வன்முறையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள். ஜெரால்டு கொலைக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்” என்றார்.  இதுகுறித்து அவரது தாயர் கூறுகையில், “தனது மகன் ஜெரால்டை ஜோதிபாசு, அவரது சகோதரர்கள் கடந்த  சில மாதங்களுக்கு முன்பு தாக்கினர். அதைத் தொடர்ந்து  தற்போது மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்துவிட்டனர்” என்றார்.