districts

img

15 நாட்களாக தொடர்ந்து பணி: லாரியிலேயே இறந்த ஓட்டுநர்

திருச்சிராப்பள்ளி, செப்.23 - திருச்சி மாவட்டம் துறையூர்  பெருமாள்பாளையம் கீழத்தெரு வைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (44). இவர் பால் டேங்கர் லாரி ஓட்டுந ராக பணியாற்றி வந்தார். கொட்டப் பட்டு ஆவின் பால் பண்ணைக்கு பால் கொண்டு வந்து இறக்கிவிட்டு, லாரியில் படுத்திருந்தார்.  அப்போது ஆவின் ஊழியர் ஒருவர், கமலக்கண்ணனை பார்க்க வந்த சமயத்தில் கமலக்கண்ணன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவ ரது மனைவிக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து கமலக்கண்ண னின் மனைவி காயத்ரி காவல் துறையில் அளித்த புகாரில் கூறி யிருந்ததாவது: எனது கணவர் கமலக்கண்ணன் கடந்த 7 ஆண்டுகளாக ராமசாமி டிரான்ஸ்போர்டில் ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். கடந்த 15 நாட்க ளாக தொடர்ச்சியாக பணிபுரிந்து வரு கிறார். அவர் ஓட்டும் வண்டிக்கு உதவியாளர் மற்றும் மாற்று ஓட்டு நர் கொடுக்கவில்லை. கடந்த செப்.21 அன்று இரவு 8.45 மணிக்கு பணியை  முடித்துவிட்டு, என்னிடம் செல்போ னில் பேசினார். அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை. விடுப்புக் கேட்டும், கொடுக்காத காரணத்தினால் மிகுந்த  மன அழுத்தத்திற்கு ஆளாகி உள் ளேன் என்றார். நான் உடனே வீட்டிற்கு வரச் சொன்னேன். ஆனால்,  இரவு வண்டி எடுக்க வேண்டும். எனவே காலையில் போன் செய் கிறேன் என்று கூறிவிட்டார்.  மேலும் செப்.22 அன்று காலை,  அவரது நண்பரான ஓட்டுநர் தமிழ்ச் செல்வன் அளித்த தகவலின் மூலம்,  நானும் எனது உறவினர்களும் ஆவின் பால் நிறுவனத்திற்கு சென்று பார்த்தோம். அப்போது எனது கண வர் வண்டியிலேயே இறந்து கிடந் தார்.

காவல்துறையினரும் அந்த  வண்டியினுள் இருந்தனர். எனது கண வரின் உடல் உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.  எனது கணவரின் வருமானத்தை நம்பியே நானும், எனது இரு மகன் களும் வாழ்ந்து வருகிறோம். எனது  கணவருக்கு விடுப்பு அளிக்காமல் தொடர்ந்து வேலை வாங்கியதால், உடல்நிலை பாதிப்பும், மன  அழுத்தமும் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார். கணவர் இறப்பிற்கு காரண மான ராமசாமி டிரான்ஸ்போர்ட் முத லாளி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும்” இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதன்பேரில் திருச்சி கே.கே.நகர் காவல் ஆய்வாளர் பால கிருஷ்ணன் வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார். சிஐடியு தலைமையில் போராட்டம் இந்நிலையில் உயிரிழந்த லாரி  ஓட்டுநர் கமலக்கண்ணனின் குடும்பத் திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அவரது உடலை வாங்க  மறுத்து திருச்சி அரசு மருத்துவ மனை வளாகத்தில் சிஐடியு தலை மையில் கமலக்கண்ணனின் உறவி னர்கள் சனிக்கிழமை போராட்டத் தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட  நிர்வாகிகள், மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.