திருச்சிராப்பள்ளி, ஆக.12 -
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வையம் பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் காலியாக உள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது மூன்று மாதம் கணினி சான்றிதழ் படிப்பு (அல்லது) இளங்கலை கணினி அறிவியல், இளங்கலை கணினி பயன்பாட்டியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 28க்குள் இருக்க வேண்டும். குறைந்தது 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ12.000/-. வையம்பட்டி வட்டாரத்திற்குட் பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரகம் வளாகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது dpiu_trc@yahoo. com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்பலாம். விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.08.23 என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.