உடல் தானம்: விழிப்புணர்வுப் பேரணி
அரியலூர், ஆக.31 - அரியலூரில் அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட், அகி லம் யோகக் கலைப் பயில ரங்கம், அரசு கலைக் கல்லூரி மனமன்றம், தத்தனூர் அம்மா மனநல காப்பகம், அன்பாலயம் மாற்றுத்திறனாளி அமைப்பு, சாந்தா முதி யோர் இல்லம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியியல் துறை சார்பில் உடல் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர், பேரணியை கொடி யசைத்து தொடக்கி வைத் தார். நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் கு. சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச. செல்வராஜ், அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், அகி லம் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மருத்துவக் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்கள் உடல் தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகை யிலான பதாகைகளை கை களில் ஏந்தியபடி பேரணி யாக அரியலூரின் முக்கிய வீதிகளில் சென்றனர்.
குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல்
அறந்தாங்கி, ஆக.31 - புதுக்கோட்டை மாவட் டம் ஆவுடையார்கோ யிலை அடுத்த பெருநாவ லூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில், மாணவர்கள் 1400 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப் பட்டன. கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவ லர்கள் ரமேஷ், பழனிதுரை வழிகாட்டுதல்படி, நலப்ப ணித் திட்ட மாணவ, மாண வியர் மாத்திரைகள் விநி யோகப் பணியைச் செய்த னர்.
விபத்தில் ஒருவர் பலி
தஞ்சாவூர், ஆக.31 - புதுக்கோட்டை மாவட் டம் கீரமங்கலம் பகுதி யைச் சேர்ந்தவர் சந்திரன் (39). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு விடு முறையில் வந்திருந்தார். இந்நிலையில் பேராவூ ரணிக்கு வியாழக்கிழமை இரவு தனது மோட்டார் சைக் கிளில் வந்து விட்டு, கீர மங்கலம் சென்று கொண்டி ருந்தார். அப்போது திடீ ரென மழை பெய்ததால், விரைவாக வீடு செல்ல வேண்டும் என மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றுள்ளார். அப்போது சாணாகரை என்ற ஊரில் ஒரு வளைவில், மோட்டார் சைக்கிளை வேகமாக திருப்பிய போது நிலை தடு மாறி சாலையோரம் உள்ள வயலில் தலை குப்புற விழுந்து படுகாயம் அடைந் தார். அருகில் உள்ள வர்கள் அவரை மீட்டு பேரா வூரணி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து சந்திரன் மனைவி புவனேஸ்வரி அளித்த புகா ரின்பேரில் பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில் சந்திரன் உடல், உடற் கூறாய்வு செய்யப்பட்டு வெள்ளியன்று மாலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பயன்பாடற்ற புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து பட்டா வழங்குக!
சிபிஎம் வலியுறுத்தல் புதுக்கோட்டை, ஆக.31 - பயன்பாடற்ற பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களை வகைமாற்றம் செய்து ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலை மையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம் பேசினார். மாநிலக்குழு உறுப்பி னர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ., உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற னர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ். கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் ஏழை, எளிய மக்கள் பல வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் ரேசன் அட்டை, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று அப்பகுதி களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரு கின்றனர். இந்நிலையில், தற்பொழுது ஆக்கிர மிப்புகளை அகற்றுகிறேன் என்றும், நீதி மன்ற உத்தரவு என்று சொல்லியும் பல இடங் களில் வீடுகளை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனால், மேற்படி இடங்களில் வசிக்கும் மக்கள் பெரும் கலக்கத் தில் இருந்து வருகின்றனர். ஏழை, எளிய மக்களை நிலைகுலையச் செய்யும் இந்நட வடிக்கையை ஒருபோதும் அனுமதிக்க முடி யாது. எனவே, தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு அனைத்து வகையான புறம் போக்குகளிலும் குடியிருந்து வரும் மக்க ளுக்கு உரிய வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். அதுவரை ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், பயன்பாடற்ற புறம்போக்கு நிலங்களை உரிய வகைமாற்றம் செய்து வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் இறுதி வாரம் தமிழ் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர், ஆக.31- தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 14 ஆவது பட்ட மளிப்பு விழா அக்டோபர் 2024 இறுதி வாரத்தில் நடத்துவ தற்கு திட்டமிடப்பட்டுள்ளதால், தமிழ்ப் பல்கலைக்கழக வளாக கல்வி தேர்வுப் பிரிவின் வழியாகத் தேர்ச்சி அறிவிக்கப்பட்ட முதுநிலை, ஆய்வியல் நிறைஞர், முனை வர் பட்டம், கல்வியியல் நிறைஞர், இளங்கல்வியியல் மாணவர்கள் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறத் தகுதியுடையவராவர். மேலும் பட்டமளிப்பு தொடர்பான தகவல்களை tamil university.ac.in என்ற இணையதளம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவித்துள்ளார்.
பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு
பாபநாசம், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேலவழுத் தூர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாபநாசம் வட்டார வளமைய மேற்பார் வையாளர் (பொ) முருகன் தலைமை வகித்தார். தலைவி யாக ரஞ்சிதா, துணைத் தலைவியாக புவனேஸ்வரி உட்பட 24 உறுப்பினர்கள் தேர்வாகினர். பள்ளித் தலைமை ஆசிரியர் ஜான்சிராணி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற னர். பாபநாசம் அருகே மெலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடந்த பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டத்திற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் தலைவராக மகேஸ்வரி, துணைத் தலைவராக விமலா ராணி உட்பட 24 உறுப்பி னர்கள் தேர்வாகினர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அம்மாபட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ஆர்.எம். அகமது தம்பி தலைமை வகித்தார். பள்ளி பட்டதாரி ஆசிரியர் பிரபாகரன் வரவேற்றார். குறிஞ்சி நைனா முகமது முன்னிலை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் பார்வையாளராக செயல்பட்டார். மாவட்ட கல்வி அலுவ லர் ஜெயந்தி மறு கட்டமைப்பு நிகழ்வு குறித்த ஆலோச னைகளை வழங்கினார். இப்பள்ளியில் 24 உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் துணைத் தலைவர் சித்ரா, கல்வியாளர் முகமது இப்ராஹிம், மக்கள் பிரதிநிதிகள் சித்தி மதினா, பௌசியா பேகம் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
அரசு கட்டடம் தனிநபருக்கு பட்டா வி.ஏ.ஓ., உதவியாளர் பணியிடை நீக்கம்
தஞ்சாவூர், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா இடை யாத்தி வடக்கு கிராமத்தில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில், புல எண்.67/9-ஏ, இல், அரசு அங்கன் வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், அரசுக்குச் சொந்தமான அந்த இடத்தை, அதே ஊரைச் சேர்ந்த தனிநபரான ராமசாமி என்ப வருக்கு, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் கிராம உதவியாளர் அன்பழகன் இருவரும் சேர்ந்து முறை கேடாக பட்டா கொடுத்துள்ளனர். இதையடுத்து உடனே ராமசாமி, தனது மகன் துரைமாணிக்கம் என்பவருக்கு தான செட்டில்மென்ட் ஆவணம் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக, பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் கிராம மக்கள் சார்பில், முறைகேடாக அரசு கட்டடத்தை பட்டா மாற்றம் செய்தது குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யரிடம் சமீபத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தர வின்பேரில், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ விசாரணை நடத்தினார். அதில், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் கிராம உதவியாளர் அன்ப ழகன் இருவரும் முறைகேடாக அரசு கட்டடத்தை தனி நபருக்கு பட்டா வழங்கியது உறுதியானது. இதனால், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சி யர் ஜெயஸ்ரீ, கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் கிராம உதவியாளர் அன்பழகன் ஆகிய இருவரையும் பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கல்
திருச்சிராப்பள்ளி, ஆக.31 - பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும் விவசாயி களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், பனை விதைகள் மற்றும் பனங்கன்றுகள் வழங்க ரூ.1.18 லட்சம் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விருப்பமுள்ள விவசாயி கள் அதிகபட்சமாக 50 விதைகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள் மூலம் நடு வதற்கு 100 விதைகளும், பனங்கன்றுகள் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 15 பனங்கன்றுகளும், பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள்/ஊராட்சி மன்றங்கள் மூலம் நடுவ தற்கு அதிகபட்சமாக 30 பனங்கன்றுகளும் 100 சதவீதம் மானி யத்தில் வழங்கப்படும். எனவே இத்திட்டத்தில் பயனடைய விருப்பம் உள்ள விவ சாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் வயது அழகும் ஆபத்தும் கலந்தவை
தஞ்சாவூர், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பேராவூரணி வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில், கல்லூரி மாணவ, மாணவி களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில், பேராவூரணி வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரி மையியல் மற்றும் குற்றவி யல் நீதித்துறை நடுவரு மான என்.அழகேசன் தலை மையில் நடைபெற்றது. முகாமில் நீதிபதி என். அழகேசன் பேசுகையில், “நாம் அனைவரும் கட்டா யம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மாண வர்களாகிய உங்கள் கையில்தான் இந்நாட்டின் எதிர்காலம் அடங்கியுள்ளது. மாணவர்களுக்கு தலை யாய கடமை என்பது படிப்பு ஒன்று தான். அதற் காகத்தான் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திலும் உங்களை படிக்க வைக் கிறார்கள். கல்லூரியில் படிக்கும் வயது என்பது ஆபத்தும் அழகும் கலந்தவையாகும். காரணம் இந்த வய தில்தான் பல்வேறு தவறான சிந்தனைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஏற்ப டும். எனவே, இம்மாதிரி யான ஆபத்தில் மாணவ, மாணவிகள் மாட்டிக் கொள்ளாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி, வெற்றி பெற வேண்டும்” என்றார். மேலும், மாணவர் களுக்கு அடிப்படைச் சட்டம் மற்றும் உரிமைகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் மற்றும் போக்சோ சட்டம் குறித்து விளக்கம் அளித் தார். முகாமில், வழக்கறி ஞர்கள் சித்திரைவேல், முத்துக்குமார், மாதவி, பேரா வூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் இரா.திரு மலைச்சாமி, கல்லூரி பேராசிரியர் ராணி ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.