பொதுமக்கள் அதிருப்தி தஞ்சாவூர், நவ.16 - தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் மீண்டும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் 5 ஆண்டு களாக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அப்போது, பெரியவர்களுக்கு ரூ.30, சிறு வர்களுக்கு ரூ. 20 என கட்டணம் நிர்ண யிக்கப்பட்டது. இப்பூங்காவில் எதிர்பார்த்த அளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். இச்சூழ்நிலையில் கட்டணம் வசூலிக்கப்படு வது நியாயமில்லை என சிபிஎம், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரி வித்தனர். இதையடுத்து, சில நாட்களில் சிவ கங்கை பூங்காவில் கட்டணம் வசூலிக்கப் படுவது நிறுத்தப்பட்டது. மேலும் சில பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டு வரப்பட்ட பிறகு நுழைவுக் கட்டணம் வசூ லிக்கும் முறை கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முறை வெள்ளிக் கிழமை மீண்டும் தொடங்கியது. இதில், பெரியவர்களுக்கு ரூ. 30, சிறுவர்களுக்கு ரூ. 20 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில், நுழைவுக் கட்டணம் மிக அதிகமாக வசூ லிக்கப்படுகிறது என பொதுமக்கள் அதிருப்தியுடன் தெரிவித்தனர். இது குறித்து, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், “சிவகங்கை பூங்கா பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அலங்கார மின் விளக்குகளால் அதிக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாலும், பூங்காவில் பணியாற்றும் 32 பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டியிருப்பதாலும் இக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றார்.