ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 5-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் பேரணி, ஆர்ப்பாட்டத்தை விளக்கி கொள்ளிடம் கடைவீதி, புத்தூர் கடை வீதி, அரசூர் கடைவீதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன், மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் எஸ். இளங்கோவன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் டபில்யூ.காபிரியேல், மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்ட துணை செயலாளர் சரவணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.