அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகு சார்பில் இப்பேரணி நடைபெற்றது. பேரணியை, உதவி திட்ட அலுவலர்கள் கஸ்பர்ராஜா, ராஜ்குமார், வட்டார இயக்க மேலாளர் பரிமளா ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். பேரணியானது, பிரதான கடைவீதி வழியாகச் சென்று மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.