தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரி சின்ன ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்தவர் சுசிலா. இவரது கூரை வீடு எதிர்பாராமல் நேர்ந்த தீ விபத்தில் முற்றிலும் எரிந்தது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட சுசிலாவிற்கு பாபநாசம் தாசில்தார் மணிகண்டன் தமிழக அரசின் நிவாரண உதவியை வழங்கினார்.