இல்லம் தேடி கல்வித் திட்டம், எண் ணும் எழுத்தும் திட்டம், நான் முதல் வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் ஆகிய வற்றை தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர் வத்தை உண்டாக்கிடும் பொருட்டு, ‘‘எங் கும் அறிவியல், யாவும் கணிதம்’’ என்ப தனை கருத்தில் கொண்டு, முதலமைச்ச ரால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 28.11. 2022 அன்று ‘‘வானவில் மன்றம்’’ துவக்கி வைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமி ழகத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரு கிறது. மாணவ, மாணவியர்களிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர் வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்ற லுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்ப தன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவி யல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான் மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க் கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூக வியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் முக்கிய நோக்கமாகும். அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் ‘‘வான வில் மன்றம்’’ தஞ்சாவூர் மாவட்டத்தில் அதன் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தெரிவித்ததாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் 208 அரசு நடு நிலைப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் 1,893 மாணவர்களும், 1,639 மாணவியர் களும், 7-ஆம் வகுப்பு பயிலும் 1,785 மாண வர்களும், 1,589 மாணவியர்களும், 8-ஆம் வகுப்பு பயிலும் 1,699 மாணவர்களும், 1,479 மாணவியர்களும் என மொத்தம் 10,084 மாணவ, மாணவியர்களும், 125 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் 2,175 மாணவர்களும், 1,949 மாணவி யர்களும், 7-ஆம் வகுப்பு பயிலும் 2,214 மாணவர்களும், 2,006 மாணவியர்களும், 8-ஆம் வகுப்பு பயிலும் 2,109 மாண வர்களும், 1,939 மாணவியர்களும் என மொத்தம் 12,392 மாணவ, மாணவியர் களும் வானவில் மன்றத்தின் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். அதனைப்போன்று, 104 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் 2,658 மாணவர்களும், 3,297 மாண வியர்களும், 7-ஆம் வகுப்பு பயிலும் 2,960 மாணவர்களும் 3,533 மாணவியர் களும், 8-ஆம் வகுப்பு பயிலும் 2,903 மாண வர்களும், 3,453 மாணவியர்களும் என 18,804 மாணவ, மாணவியர்களும், என மொத்தம் 437 அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு பயிலும் 6,726 மாணவர்களும், 6,885 மாணவியர்களும், 7-ஆம் வகுப்பு பயிலும் 6,959 மாணவர் களும், 7,128 மாணவியர்களும், 8-ஆம் வகுப்பு பயிலும் 6,711 மாணவர்களும், 6,871 மாணவியர்களும் ஆக மொத்தம் 41,280 மாணவ, மாணவியர்கள் வானவில் மன்றத்தின் மூலம் கல்வி பயின்று வரு கின்றனர் என்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அறிவியல் மற்றும் கணிதம் ஆர்வத்தை தூண்டும் வகையில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றத்தின் மூலம் பயன்பெற்ற, சூரக் கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஹாசிணி, மாணவர் சரவணகுமார் அரசுக்கு நன்றி தெரிவித்தனர். க.பிரேமலதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்