districts

img

கடலோர மீனவ கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிளாண்ட்

மயிலாடுதுறை, நவ.5 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி வட்டத்திலுள்ள மீனவக் கிரா மங்களான சந்திரபாடி, தரங்கம்பாடி, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சின்னமேடு, குட்டியாண்டியூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் பிரச்சனையால் அன்றாடம் பெரும் அவதியடைந்து வந்தனர்.  இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையை ஏற்று, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா  எம்.முருகன், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ பிளாண்ட் அமைப்பதற்காக, ஒவ் வொரு மீனவ கிராம பஞ்சா யத்தார்களிடமும் ஆலோசனை வழங்கி னார். அதன்படி, கிராமங்களில் பொது வான இடத்தை தேர்வு செய்து கூறுமா றும், இத்திட்டத்தால் பயன்பெறும் குடும்பங்களின் ஆதார் உள்ளிட்ட ஆவ ணங்கள் சேகரித்து வழங்க வேண்டு மெனவும் அறிவுறுத்தினார்.  ஆலோசனை கூட்டங்களில் தகவல்  தொழில் அணி மண்டல பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர்கள் அன்பழகன், அப்துல் மாலிக், அமிர்த விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலை வர் சுகுணசங்கரி குமரவேல், சந்திர பாடி ஊராட்சி தலைவர் பிரமிளா ராஜ்குமார், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.