districts

img

புகளூர் காகித ஆலை தொழிலாளிகள் பூரணம், முருகேசன் பணி நிறைவு பாராட்டு விழா கட்சி நிதி ரூ.75 ஆயிரம் அளிப்பு

கரூர், ஜூன் 19-

    கரூர் மாவட்டம் புகளூ ரில் இயங்கிவரும், தமிழ்  நாடு காகித ஆலையில் பணி நிறைவு பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பூரணம், முருகேசன் ஆகியோருக்கு கரூர் ஒன்றி யக்குழு கட்சி அலுவலகத் தில் ஜூன் 18 அன்று டிஎன்பிஎல் கட்சி கிளைகள்  சார்பில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.  

    நிகழ்விற்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் காதர் பாட்ஷா வரவேற்றார். டிஎன்பிஎல் தொழிலாளர் சங்க தலைவர் அரவிந்தன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சுமதி  இளங்கோவன், அரசு ஊழி யர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் சுப்ரமணியன், காப்பீட்டு கழக தஞ்சை கோட்ட துணைச் தலைவர் கணேசன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் சகிலா, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர்  கே.துரைராஜ்,  சிஐடியு மாவட்டத் தலைவர் ஜீவா னந்தம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கரூர் ஒன்றிய செய லாளர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.

நிதி அளிப்பு

     நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி யாக பூரணம் குடும்பத்தினர் சார்பில் ரூ.40 ஆயிரமும், நிர்மல் பள்ளி நிதியாக ரூ.10 ஆயிரமும், முருகேசன் குடும்பத்தினர் சார்பில் கட்சி  நிதியாக ரூ.20 ஆயிரமும், நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5  ஆயிரமும் என மொத்தம் ரூ.75 ஆயிரத்தை வழங்கி னர்.