districts

img

திருச்சி முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிக்கு ரூ.10,000 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிளும், 2 மாற்றுத்திற னாளிகளுக்கு தக்க செயலியுடன்கூடிய திறன் பேசிகளையும் ஆட்சியர் வழங்கினார். 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் கைது 

மயிலாடுதுறை, ஜூலை 15 - மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூரில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் கைது  செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (34). இவர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக  பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 மகன்களும் உள்ள னர். மனைவி குழந்தைகள் சொந்த ஊரில் உள்ள நிலை யில், ஜூலை 8 அன்று 16 வயது சிறுமி ஒருவரை காவலர்  குடியிருப்புக்கு வரவழைத்த திருநாவுக்கரசு, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து 1098 சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த  புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் என்பவர், பெண் உதவியாளருடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர்  காவல்துறையினர், போக்சோ வழக்குப் பதிந்து திரு நாவுக்கரசை கைது செய்து நாகை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இச்சம்பவத்தை அறிந்த மாவட்ட எஸ்.பி. மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திரு நாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்றல் மையம் தொடக்கம்

அறந்தாங்கி, ஜூலை 15 - புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம்  மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 50 மையங்களில் தொடங்கப்பட்டது.

மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேதி யன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிய  பாரத எழுத்தறிவு கற்றல் மையத்தினை மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம்  தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவி மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சண்முகப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

வேதியன்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இளையராஜா வரவேற்றார். 

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி புதிய பாரத எழுத்தறிவு திட்டமானது 2022 முதல் 2027 வரை செயல்படுத்தப்பட உள்ளது. கற்றல் மையத்தை, பள்ளி கள், சமுதாயக்கூடம், நூறு நாள் வேலை திட்ட பணித்தளம்  மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து அமைத்திட வேண்டும். இதில் கற்போர் வசதிக்கேற்ப கற்றல் மையம்  வைத்து கொள்ளலாம்.

அதேபோல் கற்போருக்கு எழுத்துக்களை அடையா ளம் காணுதல், எண்களை அடையாளம் காணுதல், எழுதப் படிக்க வாசிக்க, பெயர் எழுதுதல், குடும்ப  உறுப்பினர்கள் பெயர்கள் எழுதுதல், ஊர் பெயர் எழுதுதல்  மற்றும் கையெழுத்து போடுதல் போன்றவற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

சேதுபாவாசத்திரம்
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் திற்கு உட்பட் தெரிவு செய்யப்பட்ட 35 பள்ளிகளில் புதிய  பாரத எழுத்தறிவு திட்டம் (2024-25) துவக்க விழா திங்கள் கிழமை நடைபெற்றது.

குருவிக்கரம்பை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்  நடைபெற்ற புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை வட்டார கல்வி அலுவலர் எம்.கே.ராமமூர்த்தி துவக்கி வைத்தார்.  வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.முருகேசன் திட்டத்தின் நோக்கம் பற்றி கூறினார். ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சரவணன் வரவேற்றார்.

இத்திட்டம் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு  ஐந்தாண்டு திட்டம். இத்திட்டம் கடந்த இரண்டு ஆண்டு களாக செயல்பட்டு நிறைவு பெற்றது. தொடர்ந்து மூன்றாம்  ஆண்டாக இத்திட்டம் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் வாயிலாக 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களை குடியிருப்பு வாரியாக  கண்டறிந்து அவர்களுக்கு எழுத்தறிவும், எண்ணறிவும் கற்றுத் தரப்பட உள்ளது. மையத்தில் கற்போருக்கு புத்த கங்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமை ஆசிரியர்  கிரேஸ் செல்வம் நன்றி கூறினார்.

மக்கள் குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், ஜூலை 15-  தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட  ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதி யோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 497 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சிய ரிடம் வழங்கினர். 

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,  திருவையாறு வட்டத்தைச் சார்ந்த சுரேஷ் என்பவருக்கு பார்வையற்றோர் கல்வி பயிலும், மாற்றுத் திறனாளி களுக்கான மின்னனு பிரெய்லி வாசிப்பு சாதனமும், சத்துணவுத் திட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் இரண்டு நபர்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி  நியமன ஆணையினையும், ஒரு நபருக்கு சமையல் பணி  நியமன ஆணையினையும், கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைக்க ரூ.6,26,250/- நிதி உதவித் தொகைக்கான காசோலையினை தூய லூர்து அன்னை பங்கு ஆலயத்திற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கி னார்.

இளையான்குடி அருகே  எருது கட்டு விழாவில் மோதல்
காவல்துறையினர் தடியடி 

சிவகங்கை, ஜூலை 15- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள  அ.புதூர் வலசை கிராமத்தில் தின்னாருடைய அய்யனார்  கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு எருது கட்டு  விழா ஏழு வருடங்களுக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த விழாவில் அண்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எருதுகட்டில் மாடை அவிழ்த்துவிட்டனர். அ.புதூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாட்டை பிடித்தனர். மாட்டை எதற்காக பிடித்தாய் என்று கூறி ஒரு  தரப்பினர் வாக்குவாதம் செய்தனர்,இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி  அடித்து கூட்டத்தை கலைத்தனர் இதில் அன்டக்குடி கிரா மத்தைச் சேர்ந்த செங்கோல் ராஜன் என்ற இளைஞர் பலத்தக் காயம் அடைந்தார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர்.

சிவகாசியில் அனுமதியின்றி பேன்சிரக பட்டாசு தயாரித்தவர் கைது

சிவகாசி, ஜூலை 15- சிவகாசி பெரியார் காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (48). இவர் அட்டைப் பெட்டி தயார் செய்யும்  நிறுவனம் நடத்தியுள்ளார். ஆனால், அங்கு சட்ட விரோத மாக பேன்சி ரக வெடிகளை அனுமதியின்றி சட்ட விரோத மாக தயாரித்து வந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகலின் பேரில் சிவகாசி, டி.எஸ்.பி  சுப்பையா, இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, சார்பு ஆய்வாளர்  ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் மற்றும்  தனிப்பிரிவு காவலர்கள் அங்கு சென்று சோதனையிட்ட னர். அதில் அங்கு அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்ப டும் வேதிப் பொருட்கள், குழாய்கள்   இருப்பது தெரிய  வந்தது. இதையடுத்து, சிவகாசி கிழக்கு போலீசார் அங்கிருந்த  பொருட்களை பறிமுதல் செய்ததோடு பால்பாண்டியை  கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.