districts

img

மணமேல்குடி: மாட்டுவண்டி எல்லை பந்தயம்

அறந்தாங்கி, அக்.6 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கடைவீதியில் எம்.ஆர். மெடிக்கல் செல்வம்  மற்றும் மருதமுத்து நினைவாக மூன்றாம்  ஆண்டு மாட்டுவண்டி எல்லை பந்தயம் நடை பெற்றது. போட்டியை மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகே யன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த போட்டியில் புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாடு கள் கலந்து கொண்டன. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரூ.1.50 லட்சம்  ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப் பட்டது.