districts

புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளி, கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புக!

புதுக்கோட்டை, செப்.30 - புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டுமென இந்திய மாணவர்  சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் புதுக் கோட்டை மாவட்ட பேரவை மாவட்டத் தலை வர் அ.சந்தோஷ்குமார் தலைமையில் சனிக் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. பேரவையைத்  தொடங்கி வைத்து தமிழ்நாடு  அறிவியல் இயக்க மாநிலக்குழு உறுப்பினர் அ.மணவாளன் பேசினார். வேலை அறிக் கையை மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்த னன் முன்வைத்தார். மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவராக மு.வாசுதேவன், செயலாளராக இரா.வசந்தகுமார், துணைத்  தலைவர்களாக அ.பாலாஜி, சிவபாலாஜி,  துணைச் செயலாளர்களாக ரெ.கார்த்திகா தேவி, ச.பிரியங்கா ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். முன்னதாக மாநில செயற்குழு உறுப் பினர் ரெ.கார்த்திகாதேவி வரவேற்க, அ. பாலாஜி நன்றி கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரி மாண வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கறம்பக்குடி, தஞ்சாவூர் வழித்தடங்களில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். அரசுப் பள்ளி, கல்லூரிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். துணை மருத்துவப் படிப்பு மாண வர்களுக்கான விடுதி வசதிகளை ஏற்படுத்த  வேண்டும். புதுக்கோட்டையில் அரசு சட்டக் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும். அரசுப் பள்ளி மற்றும்  கல்லூரிகளில் மாணவர்களிடம் நிர்ணயிக்கப் பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம்  வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.