புதுக்கோட்டை, ஜன.2 - தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத் துறை சார்பில், ‘வேர்களைத் தேடி’ என்னும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் தமிழக பண்பாட்டினை அறிந்துகொள்ளும் வகையில் ஞாயிற்றுக்கிழமை புதுக் கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு, சுற்றுலா குழுவினர் வருகை புரிந்தனர். அவர்களை வரவேற்று மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கலந்துரையாடினார். பின்னர் அவர் தெரிவிக்கையில், ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் முதல் பண்பாட்டு பயணத்திற் காக ஆஸ்திரேலியா, கனடா, பீஜி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளை ஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் வந்துள்ளனர். இவர்கள் சென்னையில் இருந்து மகாபலி புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல் வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடகலை, சிற்பக்கலை, இயல், இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம், சுதந்திரப் போராட்ட வரலாறு உள்ளிட்ட பல்வேறு தமிழ் இலக்கிய வரலாற்றை அறிந்து கொள்ள உள்ளனர். அதனடிப்படையில் சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்திற்கு வந்த குழுவினருக்கு, பழங்கால சமண துறவிகள் வாழ்வியல் குறித்தும், மூலிகை ஓவியங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், குடுமியான் மலையின் சிறப்புகள் குறித்தும், திருமயம் கோட்டையின் சிறப்புகள் குறித்தும், ஏனைய சுற்றுலா தலங்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகள், கட்டிட கலையின் பெருமைகள் குறித்தும் கூறப்பட்டது என்றார். இந்நிகழ்வில், இலுப்பூர் கோட்டாட்சியர் தெய்வநாயகி, அன்னவாசல் ஒன்றியக் குழுத் தலைவர் வி.ராமசாமி, மாவட்ட சுற்றுலா அலு வலர் பி.முத்துச்சாமி, இலுப்பூர் வட்டாட்சி யர் சூரியபிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ஆனந்தன், பிரேமாவதி, ஊராட்சி மன்றத் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.