அறந்தாங்கி, ஆக.12 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் அறந்தாங்கி கிளை சார்பாக எழுத்தாளர் கருப்பு ராஜா வின் ‘கரும்புச்சாறு’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா ஐடியல் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தமுஎகச அறந்தாங்கி கிளைத் தலைவர் கவிஞர் சேக் சுல்தான் தலைமை வகித்தார். அறந்தாங்கி தமுஎகச செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். நிகழ்ச்சி யில் கவிஞர் ஜீவி ‘கரும்புச்சாறு’ கவிதை நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். கவிஞர்கள் கே.பா, கவி கார்த்திக், கஃ பார்கான், திசைகள் அமைப்பின் பொருளா ளர் முகமது முபாரக், அறந்தை போர்ட் சிட்டி ரோட்டரி கிளப்பின் பொருளாளர் முனை வர் முபாரக் அலி, கருப்பு ராஜாவின் குடும்பத் தார்கள், தமுஎகச உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நூல் ஆசிரியர் கருப்பு ராஜா ஏற்புரையாற்றினார்.