மயிலாடுதுறை, செப்.15 - மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடியில் வேதியம் பிள்ளையின் வாழ்க்கை வர லாற்று தொகுப்பு நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது. தென்னாப்பிரிக்காவில் காந்தி யடிகள் பணியாற்றி பிறகு, ஆங்கி லேய அரசின் அடக்குமுறைக்கு எதி ராக போராடிய காலங்களில் அவ ருக்கு உறுதுணையாக இருந்த வர்கள் பெரும்பாலும் தமிழர்களே, அதுவும் தில்லையாடியிலிருந்து சென்றவர்களே காந்தியடிகளுக்கு துணையாக இருந்தனர். மேலும், அவர் தலைமை தாங்கிய பல்வேறு போராட்டங்களில் அவருக்கு பாது காப்பாகவும் இருந்துள்ளனர். அப்படி இருந்தவர்களில் தில்லையாடி வேதியம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர். தென்னாப்பி ரிக்காவில் சுரங்கம் ஒன்றில் மேலா ளராக பணியாற்றி பின்பு அங்கேயே செங்கல் சூளை ஒன்றை சொந்தமாக நிறுவி தொழிலதி பராக இருந்தவர் வேதியம் பிள்ளை. தமிழில் புலவரான இவர் தான், காந்தியடிகளுக்கு தமிழ் மொழியை கற்றுத் தந்ததோடு, திருக்குறளின் சிறப்பு பற்றியும் கூறியுள்ளார். வ.உ.சிதம்பரனாரின் உற்ற நண்பராகவும், அவர் வறுமையில் இருந்த போது மாதந் தோறும் உதவி அளித்து வந்தவர். 1915 இல் தில்லையாடியில் பெண் களுக்கான பள்ளிக்கூடத்தை நிறுவி மதிய உணவு திட்டத்தையும் அப்போதே துவங்கி காமராசரின் மதிய உணவு திட்டத்திற்கு அடித் தளமிட்டிருக்கிறார். தான் தென்னாப்பிரிக்காவில் தொழில் செய்தாலும், தன் உழைப் பின் பெரும் பகுதியை தில்லையாடி மக்கள் கல்வி பெறுவதற்காக செல விட்ட தமிழ் புலவர் வேதியம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் சனிக்கிழமை தில்லையாடி பொது நலச்சங்க மண்டப அரங்கில் வெளியிடப் பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரி யரும், தில்லையாடி கிராம பொது நல சங்கத்தின் கௌரவ தலைவ ரும், தில்லையாடி பற்றிய வர லாற்று நூலை எழுதியவருமான எஸ்.ஜெகதீசன் வரவேற்று பேசி னார். அருணாசலக் கவிராயர் இயல், இசை நாடக மன்றத் தலைவர் பாவ லர். சு.இராஜமாணிக்கம், வேதியம் பிள்ளை பற்றிய நூலினை தொகுத்து வழங்கிய மதுரை பாபு நாராயணசாமி, இங்கிலாந்தில் வசிக்கும் வேதியம் பிள்ளையின் பேரன் ராஜேந்திரன் சுந்தரம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். வேதியம் பிள்ளை பற்றிய நூலினை வெளியிட்டு, தென்னாப் பிரிக்காவில் காந்தியடிகளுடன் வேதியம்பிள்ளை உள்ளிட்டோர் எடுத்துக் கொண்ட புகைப்படத் தினை திறந்து வைத்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சிறப்புரையாற்றினார். கல்விக்காக உழைத்த தில்லை யாடி வேதியம் பிள்ளையின் சிறப்பு களை தமிழ் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அவரது சேவை களை போற்றும் விதமாக சிலை யுடன் கூடிய மணிமண்டபம் அமைக்க வேண்டுமென தில்லை யாடி கிராம பொது நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் விழா வில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீ.தமிழன்பன் நன்றி கூறி னார்.