districts

img

தஞ்சையில் 10 வயது சிறுமி எழுதிய நூல் வெளியீடு

தஞ்சாவூர், ஏப்.28- தஞ்சாவூரில் 10 வயது சிறுமி எழுதிய ‘இனியாஸ் ஸ்டோரிஸ்’ (இனியாவின் சிறு கதைகள்) என்ற ஆங்கில நூல் சனிக்கிழமை  மாலை வெளியிடப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை  எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் ராமகிருஷ் ணன் - ரேவதி தம்பதியின் மகள் இனியா (10).  இவர் ஈஸ்வரி நகரிலுள்ள தனியார் பள்ளியில்  5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில  ஆண்டுகளுக்கு முன்பு 60 இலக்கிய நூல்க ளின் பெயர்களை 40 நொடிகளில் சொல்லி சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்து, இவர் 12 நீதிக்கதைகள் அடங்கிய ‘இனி யாஸ் ஸ்டோரிஸ்’ என்ற ஆங்கில நூலை படைத்துள்ளார். இந்நூலை தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் சி. மகேந்திரன் வெளியிட, அதை  மேயர் சண்.ராமநாதன் பெற்றுக் கொண்டார்.  இந்நூலை சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்  பண்டிதர் மணி.மாறன், வழக்குரைஞர் வெ. ஜீவகுமார், மருத்துவர் இலரா. பாரதி செல்வன், எழுத்தாளர் லெட்சுமி அம்மாள், வெற்றித் தமிழர் பேரவை மாநிலத் துணைப்  பொதுச் செயலர் இரா.செழியன் உள்ளிட் டோர் பாராட்டிப் பேசினர். நூலை எழுதிய சிறுமி ரா. இனியா ஏற்புரையாற்றினார். விழாவில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், வழக்குரைஞர் சி. சந்திரகுமார், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நா.வைகறை, தமிழ்நாடு காவிரி  விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலர்  சுவாமிமலை சுந்தர.விமல்நாதன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ரேவதி ராமகிருஷ்ணன் வர வேற்றார். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவை கவிஞர் ராகவ் மகேஷ் தொகுத்து  வழங்கினார்.