திருவாரூர், ஆக.4 -
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தின் தமிழ்த் துறையில், “கொடாப்பு” தமிழ் வட்டாரப் படைப்புகளின் சொல்லகராதி நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்வின் அறிமுக உரையை முனைவர் பா.குமார் வழங்கினார். அதனைத் தொ டர்ந்து “கொடாப்பு” சொல்லகராதி நூலை துணைவேந்தர் மு.கிருஷ்ணன் வெளியிட, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேரா. இரா.திருமுருகன் பெற்றுக் கொண்டார்.
நூல் பற்றிய திறனாய்வுரையை திரு.வி.க அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் தி.நடராசன் மற்றும் ஆய்வாளர் சண்முகப்பிரியா வழங்கினர். நிகழ்ச்சியில் புலமுதன்மையர் பேரா.ப.வேல்முருகன், தமிழ்த்துறை தலைவர் முனைவர் க.ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.