districts

img

பொதுத்துறை நிறுவனங்களை விற்கக் கூடாது! திருச்சியில் சிஐடியு, ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.3 - உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் அமைப்பு தினத்தையொட்டி, தொழிலா ளர்களின் சலுகைகளையும், உரிமைகளை யும் பறிப்பதை கண்டித்தும். திருச்சி தொழிலா ளர் அலுவலகத்தில் ஏசிஎல், டிசிஎல், ஜெசிஎல்  பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மக்களின் சொத்தான பொதுத்துறை நிறுவ னங்களை விற்க கூடாது என வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி சார்பில் திங்களன்று ராம கிருஷ்ணா பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகி யோர் பேசினர். சிஐடியு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவிற்கு  அஞ்சலி செலுத்தப்பட்டது.

;