திருவாரூர், ஏப்.15 - இந்தியா கூட்டணியின் நாகை தொகுதி யில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜுக்கு ஆதரவாக, திருவாரூர் மாவட்டம் குட வாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே இந்தியா கூட்டணி கட்சி தலை வர்கள் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பா.பிரபாகரன் தலைமை வகித்தார். சிபிஎம் நகரச் செய லாளர் டி.ஜி.சேகர், திமுக பேரூர் கழக செய லாளர் ஏ.கே.டி.சேரன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைச் செயலாளர் முஸ்தபா, “மோடி அரசின் பத்தாண்டு மக்கள் விரோத ஆட்சியில் நடை பெற்ற அவலங்களையும், சிறு-குறு தொழில்களை ஒழிக்க மோடி அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டியை சுட்டிக் காட்டி யும், இந்தியா கூட்டணி சார்பாக வெளி யிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மக்கள் நலன் காக்க அளித்துள்ள வாக்குறுதிகளை கூறியும்” சிபிஐ வேட்பாளர் வை.செல்வரா ஜுக்கு கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தார்.