வாலிபர் சங்கம் கண்டனம் கரூர், ஜன.12 - குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் பாச னம் படிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதன்மூலம் விநியோகிக்கும் குடிநீரை பொதுமக்கள் குடிப்பதால் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் செம்பியநத்தம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு மோளபட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது அரசமரம் அருகில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிதான். இந்த தொட்டியை சுத்தம் செய்து ஆண்டுகள் பல ஆகிறது. தொட்டியை சுத்தம் செய்யா ததால் பொதுமக்கள் குடிக்கும் தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாகவும், பாசனம் படிந்த நிலையில் தண்ணீர் வருவ தாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த தண்ணீரை குடிப்ப தால் வயிற்றுப் போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் வேதனையுடன் தெரி வித்த மக்கள், உடனடியாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டு மென கோரிக்கை விடுத்துள்ளனர். வாலிபர் சங்கம் கண்டனம் இதுமட்டுமின்றி செம்பியநத்தம் ஊராட்சி முழுவதும் உள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளின் நிலையும் இவ்வா றுதான் உள்ளது. மாதந்தோறும் குடி நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் சுத்தம் செய்வது கிடையாது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர், அலுவலர்களிடம் தெரிவித்தால், தொட்டியை சுத்தம் செய்வதாக கூறுவார்கள். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. குடிப்பதற்கு பயனற்ற இந்த தண்ணீரால் பல்வேறு தொற்று நோய்கள் பரவுகின்றன. இந்தத் தொட்டியை சுற்றி கிடக்கும் நிலையை பார்த்தாலே நோய் வந்துவிடும்; அவ்வ ளவு சுகாதாரமற்ற முறையில் குடிநீர் தொட்டிகள் உள்ளன. அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதி காரிகள் வரும்போது மட்டும்தான், அவர்கள் வரும் பகுதியில் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களுக்கு செல்வ தற்கு அடையாளம் தெரிவதற்காக பிளிச்சீங் பவுடர் தெளிக்கப்படுகிறது. இப்படி மக்கள் மீதும், மக்களின் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை இல்லாமல் கரூர் மாவட்ட நிர்வாகம், கடவூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், செம்பியநத்தம் ஊராட்சி மன்ற நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டிக் கிறது. ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குடிநீர் தொட்டிகளையும் போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் என்ற தகவலையும் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என வாலிபர் சங்கத்தின் கடவூர் ஒன்றிய தலைவர் தினேஷ் தெரி வித்தார்.