தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை பாபநாசம்: பாபநாசம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இதனால் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தெருக்களில் சுற்றித் திரியும் நாய்கள், சாலைக ளில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், கார்களில் செல்பவர்களை குரைத்தபடி துரத்துகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கு கின்றனர். பிரதான சாலைகளில் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்கின்றன. இதனால் சாலைகளில் நடந்துச் செல்பவர்கள் அச்சத் திற்கு ஆளாகின்றனர். குழந்தைகளால் தெருக்களில் விளையாட முடியவில்லை. தனியாகச் செல்லும் குழந்தைகளை நாய்கள் துரத்துகின்றன. பழக்கமான தெருக்களில் கூட இரவு பணி முடித்து திரும்புபவர்களால் வீடு செல்ல முடியவில்லை. ஆடு, கோழி ஆகியவற்றை தெருநாய்கள் கடிக்கத் துரத்துகின்றன. மேலும், தோல் நோயுடன் பல நாய்கள் சுற்றித் திரிகின்றன. பிற பகுதிகளிலிருந்து கூட இங்கு நாய்கள் கொண்டு வந்து விடப்படுகிறதா என்கிற அளவிற்கு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.