districts

img

592 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

இராமநாதபுரம்,ஜூன் 23- இராமநாதபுரம் மாவட்டம் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் மூலம் இரண்டு ஆண்டுகளில் 25460 பேருக்கு ரூபாய் 7.84 கோடி மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள் ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக் க்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் பிற்படுத்தப் பட்ட. மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மர பினர், சிறுபான்மையினர் ஆகியோர் சமூகக் கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரு கிறார், இராமநாதபுரம் மாவட்டத்தில் பிற் படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் மே 2021 முதல் ஏப்ரல் 2022 வரை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும்  சீர் மரபினர், கிராமப்புற பெண்கள் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 6420 பேருக்கு ரூ.39 லட்சத்து 82500 மதிப்பீட்டிலும் மாணவ மாண வியர்களுக்கான கல்வி உதவித் தொகை  திட்டத்தின் கீழ் 5341 பேருக்கு ரூபாய் ஒரு கோடியே 20 லட்சத்து 28 ஆயிரத்து 937 மதிப்பீட்டிலும் தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் டாப் செட் கோ கடன் திட்டத் தின் கீழ் ஒருவருக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இலவச தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழு பேருக்கு ரூ.35,126 மதிப்பீட்டிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பாக 228 பேருக்கு ரூபாய் 25 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டிலும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பாக 58 பேருக்கு 5 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டிலும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியம் சார்பாக ஆறு பேருக்கு ரூ. 72 ஆயிரம் மதிப்பீட்டி லும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டு கழக கடன் திட்டத்தின் கீழ்  101 பேருக்கு ரூபாய் 70 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலும் என 12,162 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 67 லட்சத்து 43 ஆயிரத்து 563 மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் மே 2022 முதல் ஜூன் 2023 வரை மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மர பினர் கிராமப்புற பெண் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 5346 பேருக்கு ஒரு கோடியே 46 லட்சத்து 37 ஆயிரத்து 602 மதிப்பீட்டிலும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பா ட்டு கழகம் டாப் செட் கோ கடன் திட்டம் கீழ் 161 பேருக்கு ஒரு கோடியே 2 லட்சத்து 45,000 மதிப்பீட்டிலும் பிற்படுத்தப்பட்டோ ருக்கு இலவச தையல் இயந்திரம் 64 பேரு க்கு ரூபாய் மூன்று லட்சத்து 40 ஆயிரத்து 28 மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுளளது. மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 75 பேருக்கு 3 லட்சத்து 98 ஆயிரத்து 775 மதிப்பீட்டிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச தேய்ப்பு பெட்டிகள் 92 பேருக்கு 4 லட்சத்து 96 ஆயிரத்து 782 மதிப்பீட்டிலும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் சார்பாக 426 நபர்களுக்கு ரூபாய் 40 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் சார்பாக ரூ. 35 லட்சத்து  ஐம்பதாயிரம் மதிப்பீட்டிலும் வழங்கப் பட்டுள்ளன. உலமாக்கள் மற்றும் இதர பணி யாளர்கள் நல வாரியம் சார்பாக 10 நபர்க ளுக்கு 86 ஆயிரத்து 250 மதிப்பீட்டிலும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்க ளுக்கு விலையில்லா நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 594 நபர்களுக்கு ரூ.30 லட்சத்து 39 ஆயிரத்து 912 மதிப்பீட்டிலும் வக்பு வாரிய  நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்க ளுக்கு இரு சக்கர வாகனம் மானியம் வழங்கும் திட்டத்தில் நான்கு நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக 192 நபர்களுக்கு ரூபாய் ஒரு கோடியே  9 லட்சத்து 66,000 மதிப்பீட்டிலும் உதவி கள் என 13,298நபர்களுக்கு ரூபாய்  5 கோடியே 17 லட்சத்து லட்சத்து 43 ஆயிரத்து 609 மதிப்பீட் டிலும் நலத்திட்ட உதவிகள் என ஆக மொத்தம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மே 2021 முதல் ஜூன் 2023 வரை 25,460 நபர்க ளுக்கு ரூபாய் 7 கோடியே 48 லட்சத்து  87 ஆயிரத்து 172 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்