மயிலாடுதுறை, அக்.6 - மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடை யூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருக்களாச்சேரி ஹமீதியா மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. திருக்கடையூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமாலதி சிவராஜ் பங்கேற்றார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன், 89 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி உரையாற்றினார். பொறையார் அருகேயுள்ள திருக்க ளாச்சேரி ஹமீதியா மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்எல்ஏ நிவேதா முருகன், 77 மாணவ-மாண விகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.