மயிலாடுதுறை, செப்.22- மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள ஆக்கூர் அரசி னர் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழ னன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு ஞானசம்பந்தம் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி வேல்முரு கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் 140 மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதேபோல், ஓரியண்டல் அரபி மேல் நிலைப் பள்ளி மாணவ, மாண விகள் 27 பேருக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர்கள் அமுர்த விஜயகுமார், அன்பழகன், அப்துல் மாலிக், ஓரியண்டல் பள்ளி தாளாளர் இக்ரம் ரசூல், தலைமையாசிரியர் ஷாஜஹான், ஆக்கூர் நிர்வாக சபை தலைவர் முகமது சித்திக், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.