districts

img

ஆவுடையார்கோவில் அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கல்

அறந்தாங்கி, செப்.1 -
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. இராமச்சந்திரன், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுந்தரி கூத்தையா, பள்ளித் துணை ஆய்வாளர் இளையராஜா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவி கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூறு மாணவர்களுக்கும், 97 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.