தஞ்சாவூர், ஜூலை 17-
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உத வித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 435 மனுக்களை ஆட்சியரிடம் பொதுமக்கள் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கிற்கான நிதி உதவி தலா ரூ.17 ஆயிரம் வீதம், 15 நபர்களுக்கு, மொத்தம் ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கான காசோலையினை வழங்கினார்.