அறந்தாங்கி, அக்.29 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த துரையரசபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கிராமிய நையாண்டி மேளம், கரகாட்ட கலைஞர்கள் நலச் சங்கத்தினருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக 50 சதவீத சலுகையில் பஸ் பாஸ் வழங்கும் விழா நடைபெற்றது. கிராமிய நையாண்டி மேளம், கரகாட்ட கலைஞர்கள் நலச் சங்க தலைவர் வி.ஆர்.கணேசன் ஏற்பாட்டில் அறந்தாங்கியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா ஆகியோர் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு பஸ் பாஸ் வழங்கினர்.