தஞ்சாவூர், ஆக.12 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஆவணம், குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடை பெற்றது. நிகழ்ச்சிகளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மு. கருணாநிதி (ஆவணம்), கு. மகேஸ்வரி (குருவிக் கரம்பை) ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினரான பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். குருவிக்கரம்பை பள்ளி யில் 102, ஆவணம் பள்ளியில் 40 மிதிவண்டி கள் என மொத்தம் 142 விலையில்லா மிதி வண்டிகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப் பட்டன.