தஞ்சாவூர், ஜூலை 8 - தஞ்சாவூர் அருகே ஈச்சங்கோட் டையில், கோத்ரெஜ் குழுமம் சார்பில் பாமாயில் எண்ணெய், பனை விவசா யிகளுக்கான தீர்வு மையம் திங்கள் கிழமை தொடங்கப்பட்டது. இந்த தீர்வு மையத்தில், விவ சாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், அதற்கான உரங்கள், பராமரிப்பு கருவிகள், பின்னர் எண்ணெய் பனை விதையை கொள்முதல் செய்யவும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இதனை துவக்கி வைத்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது: விவசாயிகளின் வாழ்வாதா ரத்தை பெருக்க வேண்டும் என்பது தான் முதல்வரின் நோக்கம். இதனால், டெல்டா பகுதிகளில் விவ சாயம் சார்ந்த தொழில்கள், விவசா யப் பொருட்கள் மூலம் மதிப்புக் கூட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த விளைபொ ருட்களை மதிப்புக் கூட்டி விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும். சிறு, குறு விவசாயிகள், அரசிடம் கடன் பெறாமல் வருமானத்தை சேமிக் கும் வகையில் உற்பத்தியை அதிக ரித்து வருவாயை பெருக்க வேண் டும். எப்போது பார்த்தாலும் விவசாயி கள் கடன் கேட்பதை கைவிட்டு, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக் கும் வகையில் முன்னேற வேண்டும். அப்படியாக கடன் கேட்பது முழுமை யாக எப்போது நிறுத்தப்படுகிறதோ அன்றைக்கு தான் விவசாயிகள் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்று அர்த்தம். விவசாயிகளுக்கு தெரியாத விஷயம் ஒன்று அல்ல. நாட்டின் அரசி யலையும், இயற்கையும் தெரிந்த வர்கள் விவசாயிகளை போல யாரும் கிடையாது. வேளாண் தொழிலை விட்டு நாம் என்றும் நீங்கக் கூடாது. இதற்காக விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, பாமாயில், தேங்காயை மதிப்புக் கூட்டும் பொருட்களாக மாற்ற வேண்டும். இந்தியா, பாமாயிலை 60 சதவீ தம் இறக்குமதி செய்கிறது. இருப்பி னும், நம் நாட்டில் 22 சதவீதம் பாமாயில் உற்பத்தி செய்து வரு கிறோம். பாமாயில் எண்ணெய்க்கு சந்தையில் நல்ல விலை கிடைக் கிறது. இருப்பினும், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தேங்காய் மற்றும் கடலை எண்ணெயை ரேசன் கடைகளில் விநியோகம் செய்வதற் கான ஏற்பாடுகள் நடந்து வரு கின்றன. டெல்டாவில் தண்ணீர் பிரச்சனை அதிகளவில் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், குறைவான தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பயிர்களை நோக்கி விவ சாயிகள் செல்ல வேண்டும். விவசாயி களுக்கு வருமானமும் பெருகும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், தஞ்சாவூர் எம்.பி., முரசொலி, கோத்ரெஜ் அக்ரோ வெட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் சவுதா நியோகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.