அரியலூர், ஆக. 29- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழச்சியில் 57 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், 57 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், 16 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும் வழங்கினார்.இந்நிகழ்ச்சி க்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ச.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் உமாமகேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.